Daily Updates

தினம் ஓர் ஊர் – நாட்டறம்பள்ளி (Nattarampalli) – 14/10/24

தினம் ஓர் ஊர் – நாட்டறம்பள்ளி (Nattarampalli)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – திருப்பத்தூர்

மக்கள் தொகை – 10,390

கல்வியறிவு – 71%

District Collector – Bro. K. Tharpagaraj, IAS

Superintendent of Police  – Sis. Shreya Gupta, IPS.

District Revenue Officer  – Bro. Narayanan

Municipality Commissioner – Bro. P. Santhanam

Chairman – Bro. Aajiaz Ahamed

மக்களவைத் தொகுதி – திருவண்ணாமலை

சட்டமன்றத் தொகுதி – ஜோலார்பேட்டை

மக்களவை உறுப்பினர் – Bro. Cn Annadurai (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. K. Devaraji (MLA)

District and Sessions Judge – Sis. S. Meenakumari (Tirupathur)

Chief Judicial Magistrate  – Bro. J. Omprakash (Tirupathur)

Subordinate Judge – Sis. P. Sudha (Tirupathur)

Principal District Munsif – Sis. R. Vijayalakshmi (Tirupathur)

ஜெபிப்போம்

நாட்றம்பள்ளி (Natarampalli), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும். நாட்றம்பள்ளி வட்டம்  28 நவம்பர் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் 4 வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டம் ஆம்பூர் வட்டத்தின் இரண்டு குறு வட்டங்களைக் கொண்டு 12 பிப்ரவரி 2014 அன்று நிறுவப்பட்டது. நாட்றம்பள்ளி தேர்வுநிலை பேருராட்சி 18.05.1960ல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது, 03.08.1992ல் தேர்வுநிலை பேருராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நாட்றம்பள்ளி நகராட்சிக்காக ஜெபிப்போம்.

நாட்டறம்பள்ளி வருவாய் வட்டத்தில் 30 வருவாய் கிராமங்கள் உள்ளது. இந்த பேருராட்சி 7.20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இப்பேரூராட்சி 15 மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களை கொண்டுள்ளது. இந்த நகராட்சியில் உள்ள மன்ற உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர் அவர்களுடைய பணியினை ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.

நாட்றம்பள்ளி பேருராட்சி திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியிலும், ஜோலையார்பேட்டை சட்ட மன்ற தொகுதியிலும் அடங்கியுள்ளது. திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் சகோ. C.N. அண்ணாதுரை அவர்களுக்காகவும், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சகோ. தேவராஜி அவர்களுக்காக ஜெபிப்போம். இவர்களை தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.

இந்த பேரூராட்சி 2,480 வீடுகளும், 10,390 மக்கள்தொகையும் கொண்டுள்ளது. இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்களின் வாழ்வாதாரத்திற்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்படவும், குடும்பங்களில் தேவ கரம் ஆளுகை செய்யும்படி ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

நாட்றம்பள்ளி மொத்த மக்கள் தொகையில், 4,326 பேர் வேலை அல்லது வணிக தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இதில் 2,750 ஆண்கள் மற்றும் 1,576 பெண்கள். மொத்த 4326 உழைக்கும் மக்களில், 94.87 % பேர் முக்கிய வேலைகளை செய்கிறார்கள். இந்த நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர் அவர்களையும், அவர்களுடைய தொழிலையும் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். தொழில் வளர்ச்சி அடைய ஜெபிப்போம்.

நாட்றம்பள்ளி நகரத்திற்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். நாட்றம்பள்ளி நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இந்த நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கிற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். நாட்றம்பள்ளி நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.