No products in the cart.

தினம் ஓர் ஊர் – திருத்தங்கல் (Thiruthangal) – 13/01/25
தினம் ஓர் ஊர் – திருத்தங்கல் (Thiruthangal)
மாவட்டம் – விருதுநகர்
வட்டம் – சிவகாசி
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 55,362
கல்வியறிவு – 80.5%
மக்களவைத் தொகுதி – விருதுநகர்
சட்டமன்றத் தொகுதி – சிவகாசி
மாவட்ட ஆட்சியர் – Bro. V.P.Jeyaseelan (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. L. Pitchi (I.P.S)
District Revenue Officer – Bro. R Rajendran (Virudhunagar)
மக்களவை உறுப்பினர் – Bro. B.Manickam Tagore (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. A.M.S.G.Ashokan (MLA)
மாநகராட்சி ஆணையர் – Bro. P. KRISHNAMOORTHY
மேயர் – Sis. Sangeetha
துணை மேயர் – Sis. K.Vignesh Priya
Principal District Judge – Bro. K.Jeyakumar
Subordinate Judge – Bro. S.Murugavel (Sivakasi)
District Munsif – Sis. G.P. Pavithra Rajam (Sivakasi)
ஜெபிப்போம்
திருத்தங்கல் (Thiruthangal) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி வட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சிப் பகுதியும் சிவகாசி மாநகராட்சியின் மண்டலங்களுள் ஒன்றாகும். திருத்தங்கல் சிவகாசி நகரத்தின் சுற்றுப்புறமாகும். திருத்தங்கல் 31 டிசம்பர் 2020 அன்று சிவகாசியுடன் இணைக்கப்பட்டது.
திருத்தங்கல் நகரமானது ஆனைக்குட்டம், எரிச்சநத்தம், சுக்கிரவார்பட்டி, சில்லையநாயக்கன்பட்டி, செங்கமலபட்டி, வெள்ளியபுரம்,நாரணபுரம், வடமல்லாபுரம், எம் புதுப்பட்டி, ஆலமரத்துப்பட்டி என சுற்றுபுறத்தில் உள்ள சிறிய கிராமங்களுக்கு ஒரு இணைப்பு பகுதியாக விளங்குகிறது.
இந்த நகரம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கும், விருதுநகர் மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. சிவகாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. A.M.S.G.Ashokan அவர்களுக்காகவும், விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. B.Manickam Tagore அவர்களுக்காகவும், மாவட்ட ஆட்சியர் Bro. V.P.Jeyaseelan அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. L. Pitchi அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இந்த நகரத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 15,424 குடும்பங்களையும் கொண்ட இப்பகுதியின் மக்கள்தொகை 55,362 ஆகும். அதில் 27,676 ஆண்களும், 27,686பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் கல்வியறிவு 80.5% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 92.74%, இசுலாமியர்கள் 1.03%, கிறித்தவர்கள் 6.14% மற்றும் பிறர் 0.09% ஆகவுள்ளனர்.
ஒரு காலத்தில் சிவகாசியின் ஒரு பகுதியாக இருந்த திருத்தங்கல், நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் பட்டாசு ஏற்றுமதி செய்யும் இடம் ஆகும். பிரதமர் ஜவஹர்லால் நேரு “குட்டி ஜப்பான்” என்று அழைத்தார். சிவகாசியைப் போலவே திருத்தங்கலிலும் பட்டாசு, தீப்பெட்டித் தொழிற்சாலைகள் உள்ளன. அச்சிடுதல், தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில்களுக்கு பெயர் பெற்ற சிவகாசி நகரின் மையப்பகுதியில் இருந்து திருத்தங்கல் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது கிரானைட் குவாரிகளையும் கொண்டுள்ளது, அதாவது ஸ்டாண்டர்ட் கிரானைட்ஸ் மற்றும் PRP கிரானைட்ஸ்.
திருத்தங்கல் நகரத்திற்காக ஜெபிப்போம். திருத்தங்கல் நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம். நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். திருத்தங்கல் நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.