Daily Updates

தினம் ஓர் ஊர் – கொரடாச்சேரி (Koradacheri) – 12/12/23

தினம் ஓர் ஊர் – கொரடாச்சேரி (Koradacheri)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – திருவாரூர்

மக்கள் தொகை – 6450

கல்வியறிவு – 75%

மக்களவைத் தொகுதி – நாகப்பட்டினம்

சட்டமன்றத் தொகுதி – திருவாரூர்

District Collector – Sis. T.Charusree (I.A.S)

Additional Collector (Development) /

Project Director – Sis. S. Priyanka (I.A.S)

The Superintendent of Police  – Bro. S. Jeyakumar (I.P.S)

District Revenue Officer  – Bro. K.Shanmuganathan

மக்களவை உறுப்பினர் – Bro. M.Selvarasu (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. K.Poondi Kalaivanan (MLA)

நகராட்சி ஆணையர் – Sis. Malligha

நகராட்சி தலைவர் –  Sis. S.Bhuvanapriya

நகராட்சி துணை தலைவர் – Sis. S.Akila

Chief Judicial Magistrate  – Bro.T.Balamurugan (Tiruvarur)

Principal District Court – Sis. M.Shanthi (Tiruvarur)

ஜெபிப்போம்

கொரடாச்சேரி (Koradacheri) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்திலுள்ள, குடவாசல் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி திருவாரூரிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த நகரங்கள் நீடாமங்கலம் 7 கிமீ; கும்பகோணம் 35 கிமீ; மன்னார்குடி 26 கிமீ தொலைவில் உள்ளது. கொரடாச்சேரி பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. K.Poondi Kalaivanan அவர்களுக்காகவும், நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினர் Bro. M.Selvarasu அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்களுடைய கடமையை உண்மையாக நிறைவேற்றிட ஜெபிப்போம்.

கொரடாச்சேரி பேரூராட்சியானது 4.20 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்டுள்ளது. இந்த நகரத்தில் உள்ள ஒவ்வொரு வார்டுகளுக்காகவும், வார்டு கவுன்சிலர்களுக்காகவும் ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டுகளில் உள்ள மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 6450 ஆகும். இவர்களில் ஆண்கள் 50% பேரும் மற்றும் பெண்கள் 50% பேரும் உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 1661 குடும்பங்கள் வாழ்கின்றனர். இந்த பேரூராட்சியில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

கொரடாச்சேரியின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாக உள்ளது. ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இந்த நகரத்தில் இரண்டு அரசுப் பள்ளிகள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்ளன. படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம்.

கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி நான்கு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. குடவாசல் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கொரடாச்சேரியில் இயங்குகிறது. கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்காகவும், ஊராட்சி மன்ற தலைவருக்காகவும், உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம்.

கொரடாச்சேரி ஒரு பஞ்சாயத்து நகரம் ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பாலோர் விவசாயிகள் ஆவார்கள். விவசாயத்திலிருந்து மட்டுமே பெரும்பாலும் வருமானம் ஈட்டப்படுகிறது. இந்த நகரத்தில் உள்ள விவசாயிகளுக்காகவும், விவசாய குடும்பங்களுக்காகவும், அவர்கள் செய்கின்ற தொழிலின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.