No products in the cart.

தினம் ஓர் ஊர் – கிருஷ்ணராயபுரம் (Krishnarayapuram) – 260624
தினம் ஓர் ஊர் – கிருஷ்ணராயபுரம் (Krishnarayapuram)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கரூர்
மக்கள் தொகை – 119,213
கல்வியறிவு – 63.37%
மக்களவைத் தொகுதி – கரூர்
சட்டமன்றத் தொகுதி – கிருஷ்ணராயபுரம்
District Collector – Bro. M. Thangavel, I.A.S
Superintendent of Police – Bro. Prabhakar
District Revenue Officer – Bro. M. Kannan
Project Director – Sis. Sreelekha Thamilchelvan
மக்களவை உறுப்பினர் – Sis. Jothimani (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Sis. K. Sivagama Sundari (MLA)
Mayor – Sis. Kavitha Ganesan
Corporation Commissioner – Bro. N. Ravichandran
Deputy Mayor – Bro. Dharani Saravanan
District Judge – Bro. R. Shanmuga Sundaram
Chief Judicial Magistrate (Karur) – Bro. C.Sornakumar
Principal District Munsif Judge (Karur) – Sis. T.P.Sridevi
ஜெபிப்போம்
கிருஷ்ணராயபுரம் வட்டம், தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக கிருஷ்ணராயபுரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தில் கட்டளை, சிந்தலவாடி மற்றும் பஞ்சப்பட்டி என மூன்று உள்வட்டங்களும், 25 வருவாய் கிராமங்களும் உள்ளன. இவ்வட்டத்தில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு நகரம் மற்றும் பேரூராட்சி ஆகும். கிருஷ்ணதேவ ராய மன்னரால் இசுலாமியப் படையெடுப்பாளர்களிடமிருந்து நிலத்தை மீட்டெடுக்கவும், காவிரி ஆற்றங்கரையில் பாரம்பரிய வேத வாழ்க்கை முறையை மீண்டும் நிலைநாட்டவும் தமிழ்நாட்டைக் கைப்பற்றிய போது கிருஷ்ணராயபுரத்தில் திருக்கண் மலீசரர் மற்றும் வேந்தர் குழலி அம்மன் கோயில்கள் புதுப்பிக்கப்பட்டது. அதனால் கிருஷ்ணராயபுரம் என்று பெயர் வந்தது. இத்தலம் சீதளவாய் என்றும் அழைக்கப்படுகிறது.
கிருஷ்ணராயபுரம் என்பது கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி மற்றும் கரூர் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து. இந்த கிராமம் 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் தாலுகாவின் சட்டமன்ற உறுப்பினர் Sis. K. Sivagama Sundari அவர்களுக்காகவும், கரூர் மக்களவை உறுப்பினர் Sis. Jothimani அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய ஆளுகை இவர்கள் மேலிருக்க ஜெபிப்போம்.
கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் 1,19,213 மக்கள் இருக்கிறார்கள். அதில் நகர்ப்புற மக்கள் தொகை 18,276 ஆகவும், கிராமப்புற மக்கள் தொகை 1,00,937 ஆகவும் உள்ளது. இந்த தாலுகாவில் உள்ள மொத்தம் 22 கிராமங்கள் உள்ளன. கிருஷ்ணராயபுரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியாக கவுன்சிலர்கள் இருக்கிறார்கள்.
இந்த தாலுகாவில் கல்வியறிவைப் பொறுத்தவரை, 63.37% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர், இதில் 71.96% ஆண்கள் மற்றும் 54.84% பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் இருக்கும் வாலிபர்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர்தாமே அவர்களுக்கு ஆசீர்வாதமான வழியை திறக்கும்படி மன்றாடுவோம்.
கிருஷ்ணராயபுரம் தாலுக்காவில் 4,962 நகர்ப்புற வீடுகள் மற்றும் 26,317 கிராமப்புற வீடுகள் உட்பட சுமார் 31,279 வீடுகள் உள்ளன. நகரில் 2946 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களுக்காக அவர்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். குடும்பங்களில் சமாதானம், ஐக்கியம் காணப்பட ஜெபிப்போம். குடும்பமாய் ஆண்டவருடைய நாமத்தை மகிமைப்படுத்தும்படி ஜெபிப்போம்.
இந்த நகரில் மொத்த தொழிலாளர் சதவீதம் 54.03 சதவீதம் இருக்கிறார்கள். இவர்களில் 30.55 சதவீதம் ஆண் தொழிலாளர்கள் மற்றும் 23.48 சதவீதம் பெண் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நகரில் பல்வேறு தொழில்களை செய்பவர்களை கர்த்தர் ஆசீர்வதித்து அவர்கள் தொழில்களில் முன்னேற்றம் காணும்படி ஜெபிப்போம்.
இந்த நகரம் காவிரி ஆற்றின் கரைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால் இந்த ஊரில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதில்லை. இந்த இடத்தைச் சுற்றிலும் ஏராளமான ஆலமரங்கள் மற்றும் தென்னை மரங்கள் மற்றும் மிக முக்கியமான பயிர்களில் ஒன்று வெற்றிலை செடிகள் பயிரிடப்படுகின்றன. ஒரு சிறப்பு வகை கத்தரிக்காய் (கொடிகால் கத்தரி என்று அழைக்கப்படுகிறது) பிரபலமானது. இவை மிக முக்கியமான பயிர்கள். இந்த தாலுகாவில் விவசாயிகள் சதவீதம் 9.23 சதவீதம் இருக்கிறார்கள். இதில் 5.76 சதவீதம் ஆண் விவசாயிகள் மற்றும் 3.47 சதவீதம் பெண் விவசாயிகள். விவசாய குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதித்து அவர்களின் கையின் பிரயாசத்தை மேன்மேலும் பெருகச்செய்யும்படி ஜெபிப்போம்.
கிருஷ்ணராயபுரம் நகரத்திற்காக ஜெபிப்போம். இந்த வட்டத்தில் உள்ள குடும்பங்களுக்காகவும், குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காகவும், இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம். இப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம். அநேக ஊழியர்களை எழும்ப ஜெபிப்போம். சபைகள் இல்லாத பகுதிகளில் புதிய சபைகள் கட்டப்பட ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம்.