No products in the cart.

தினம் ஓர் ஊர் – அருப்புக்கோட்டை (Aruppukkottai)
தினம் ஓர் ஊர் – அருப்புக்கோட்டை (Aruppukkottai)
மாவட்டம் – விருதுநகர்
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 87,722
கல்வியறிவு – 89.97%
மக்களவைத் தொகுதி – விருதுநகர்
சட்டமன்றத் தொகுதி – அருப்புக்கோட்டை
மாவட்ட ஆட்சியர் – Bro. V.P.Jeyaseelan (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. L. Pitchi (I.P.S)
District Revenue Officer – Bro. R Rajendran (Virudhunagar)
மக்களவை உறுப்பினர் – Bro. B.Manickam Tagore (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. K.K.S.S.R.Ramachandran (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. N.Rajamanickam
நகராட்சி தலைவர் – Sis. S.Sundaralakshmi
நகராட்சி துணை தலைவர் – Bro. G.Palanichamy
Principal District Judge – Bro. K.Jeyakumar
Sub Judge – Bro. J.Selvan Jesu Raja (Aruppukottai)
Principal District Munsif – Sis. P.Sivaranjini (Aruppukottai)
Judicial Magistrate Court – Bro .A.Muthu Esakki (Aruppukottai)
ஜெபிப்போம்
அருப்புக்கோட்டை (Aruppukkottai) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். அருப்புக்கோட்டையின் பழைய பெயர் செங்காட்டு இருக்கை இடத்துவழி என்பதாகும்.
விஜயநகரப் பேரரசு காலத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் மதுரையில் இருந்து இங்கு வந்து குடியேறி வேளாண்மை தொழில் செய்து வந்ததால் ‘அரவகோட்டை’ என அழைக்கப்பட்டது. பின் கால மாற்றத்தில் தற்போது அருப்புக்கோட்டை என அழைக்கப்படுகிறது. அருப்புக்கோட்டையை அண்டிய சிற்றூர்கள் மல்லிகை அரும்பு உற்பத்திக்குப் பெயர் பெற்றவை. அருப்புக்கோட்டை என்பது அரும்புகோட்டை என்னும் சொல்லின் மருவுச் சொல் எனவும் கூறப்படுகிறது.
இந்த நகரம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கும், விருதுநகர் மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. K.K.S.S.R.Ramachandran அவர்களுக்காகவும், விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. B.Manickam Tagore அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை ஆளுகை செய்யும்படி ஜெபிப்போம். இவர்களின் குடும்பத்தினர்களுக்காக ஜெபிப்போம்.
அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் Bro. N.Rajamanickam அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. S.Sundaralakshmi அவர்களுக்காகவும், துணை நகராட்சி தலைவர் Bro. G.Palanichamy அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் பணிகளை உண்மையாக செய்ய ஜெபிப்போம்.
இந்த நகரத்தில் 87,722 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 43,558 ஆண்கள், 44,164 பெண்கள் ஆவார்கள். அருப்புக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 89.97% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.85%, பெண்களின் கல்வியறிவு 85.18% ஆகும். அருப்புக்கோட்டையில் 23,803 வீடுகள் உள்ளன.மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 91.47% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 6.42% கிருஸ்துவர்கள் 2.02%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர்.
அருப்புக்கோட்டை முக்கிய வணிக மையமாக செயல்பட்டு வருகிறது. இது பருத்தித் தொழில்களில் முக்கியமாக நூற்பு ஆலைகளுக்குப் பெயர் பெற்றது. இந்நகரைச் சுற்றிலும் சுமார் பத்திற்கும் மேற்பட்ட தனியார் நூற்பு ஆலைகள் உள்ளன. அரிசி ஆலைகள் மற்றும் சுண்ணாம்பு தொழிற்சாலைகள், கைத்தறி, விசைத்தறி, அச்சகம் மற்றும் பள்ளி நோட்டு புத்தகம் மற்றும் தினசரி காலண்டர் தயாரிப்பு போன்ற சில சிறிய அளவிலான தொழில்கள்.
கைத்தறி, விசைத்தறி முக்கிய வேலை. அருப்புக்கோட்டை ஒரு காலத்தில் கைத்தறி நெசவுத் தொழிலுக்காகவும், விவசாய கம்புகளுக்கு மிகவும் பிரபலமானதாகவும் இருந்தது. இந்த நகரத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்காக ஜெபிப்போம். தொழிலாளர் குடும்பங்களுக்காக அவர்களின் கையின் பிரயாசத்தை கர்த்தர் ஆசீர்வதித்து தரும்படி ஜெபிப்போம்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிளஸ் டூ மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட எஸ்எஸ்எல்சி தேர்வில், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டம் 97.51% தேர்ச்சி விகிதத்துடன் மாநிலத்தில் உள்ள 68 கல்வி மாவட்டங்களில் முதலிடத்தில் உள்ளது. அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் மட்டும் 24 அரசுப் பள்ளிகள் உட்பட 40 பள்ளிகள் சென்டம் முடிவுகளைத் தந்துள்ளன. இந்த நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காகவும், படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம்.
அருப்புக்கோட்டை நகராட்சிக்காக ஜெபிப்போம். அருப்புக்கோட்டை நகராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்களின் இரட்சிப்பிற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் காணப்படுகின்ற பொருளாதார சூழ்நிலைகள் மாற ஜெபிப்போம். நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். அருப்புக்கோட்டையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். அருப்புக்கோட்டை நகராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.