Daily Updates

தினம் ஓர் ஊர் – அரிமளம் (Arimalam)

தினம் ஓர் ஊர் – அரிமளம் (Arimalam)

வட்டம் – திருமயம்

மாவட்டம் – புதுக்கோட்டை

மாநிலம் – தமிழ்நாடு

மக்கள் தொகை – 19,948

கல்வியறிவு – 78.98 %

மக்களவைத் தொகுதி – சிவகங்கை

சட்டமன்றத் தொகுதி – திருமயம்

மாவட்ட ஆட்சியர் – Sis. M. Aruna, I.A.S..

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Thiru. Abishek Gupta

மாவட்ட வருவாய் அலுவலர் – Bro. SADHEESH R

Chief Judicial Magistrate  – Bro. K.S.Paulpandian (Pudukkottai)

Principal Subordinate Judge  – Bro. V. Venkatesaperumal (Pudukkottai)

District Munsif cum Judicial Magistrate  – Bro. S. Gopalakannan (Thirumayam)

Sub Judge – Bro. C. Sasikumar (Thirumayam)

ஜெபிப்போம்

அரிமளம் (Arimalam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த பேரூராட்சி, புதுக்கோட்டை மற்றும் திருமயத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது.

சங்க காலத்தில் இந்த அரிமளம் என்னும் ஊர் ‘அரிமணவாயில்’ என்னும் பெயருடன் விளங்கியது. அந்த ஊருக்குப் பக்கத்தில் ஊறத்தூர் என்னும் ஊர் இருந்தது. இந்தப் பகுதி பசும்பூண் பாண்டியனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இந்தப் பாண்டியனை எதிர்த்த பகைவர்கள் சிலர் அவனது படைத்தலைவன் ‘நெடுமிடல்’ என்பவனைப் போரில் கொன்றனர். அரிமளம் சோழ வம்சம், பாண்டிய வம்சம் மற்றும் தொண்டைமான் வம்சத்தின் ஆட்சியாளர்களைக் கண்ட ஒரு பகுதியாகும். இது ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக மாறியது.

இப்பேரூராட்சி திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இப்பேரூராட்சியானது 9.19 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 86 தெருக்களும் கொண்டுள்ளது. அரிமளம் டவுன் பஞ்சாயத்தில் 19,948 மக்கள் தொகை உள்ளது. இதில் 10,552 ஆண்கள் மற்றும் 9,448 பெண்கள். அரிமளத்தில் ஆண்களின் கல்வியறிவு 87.25% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 70.69% ஆகவும் உள்ளது. அரிமளம் டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் 2,184 குடும்பங்கள் வாழ்கிறார்கள்.

அரிமளம் பேரூராட்சியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் கையிட்டு செய்கின்ற எல்லா வேலைகளையும் கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பும் வழிநடத்தலும் இவர்களோடுகூட இருக்க ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற தொழில்களை கர்த்தர் வர்த்திக்க செய்ய ஜெபிப்போம்.

அரிமளம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை பரிசுத்த ஆவியானவர் ஆளுகை செய்ய ஜெபிப்போம். குடும்பங்களின் தேவைகளுக்காக ஜெபிப்போம். திருமயம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்காகவும், சிவகங்கை மக்களவை உறுப்பினர் அவர்களுக்காகவும், பேரூராட்சி தலைவருக்காகவும், பேரூராட்சி துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம். அரிமளம் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.