Appam, Appam - Tamil

ஏப்ரல் 10 – பாபிலோனின் வெகுமதி!

வெகுமதிதான் சிறப்பாய் தோன்றினதே தவிர, கர்த்தர் கொடுத்த ஆரோக்கியம் என்ற வெகுமதி பெரிதாய் தெரியவில்லை. 

அவர் பாபிலோனிலிருந்து வந்தவர்களிடம், ‘கர்த்தர் என்னைக் குணமாக்கினார். என் கண்ணீரின் விண்ணப்பத்திற்குப் பதிலளித்து, பதினைந்து ஆண்டுகள் நீட்டித்தார்’ என்று சாட்சி சொல்லவில்லை. கர்த்தரை மகிமைப்படுத்தத்தவறி நன்றிகெட்டவராய் நடந்துகொண்டார்.

எசேக்கியா ராஜா செய்தது என்ன? பெருமையாக பாபிலோனிலிருந்து வந்தவர்களுக்கு தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்த வர்க்கங்களையும், நல்ல பரிமள தைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் காண்பித்தார். கர்த்தர் தமது நியாயத்தீர்ப்பின் வார்த்தைகளை ஏசாயாமூலமாக அவனுக்கு உரைத்தார். “இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டு போகப்படும்” என்றார் (2 இரா. 20:17).

தேவபிள்ளைகளே, உலகப்பிரகாரமான வெகுமதிகள் பல உங்களுக்குள் சாத்தான் நுழைவதற்கு வழியை ஏற்படுத்துபவையாய் இருக்கக்கூடும். வெளிப்பார்வைக்கு அந்த ஆபத்து மறைவானதாய் இருக்கக்கூடும். வெகுமதிகளைப் பெறுவதில் நாம் மிகவும் கவனமாயிருக்கவேண்டும்.

நினைவிற்கு:- “துன்மார்க்கன், நீதியின் வழியைப் புரட்ட, மடியிலுள்ள பரிதானத்தை வாங்குகிறான் (நீதி. 17:23).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.