No products in the cart.

தினம் ஓர் ஊர் – பத்தமடை (Pathamadai) – 16/02/24
தினம் ஓர் ஊர் – பத்தமடை (Pathamadai)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருநெல்வேலி
மக்கள் தொகை – 16625
கல்வியறிவு – 86.23 %
மக்களவைத் தொகுதி – திருநெல்வேலி
சட்டமன்றத் தொகுதி – அம்பாசமுத்திரம்
District Collector – Bro. K. P. Karthikeyan (I.A.S)
Superintendent of Police – Bro. N.Silambarasan (I.P.S)
District Revenue Officer – Sis. M.Suganya
Joint Director / Project Director – Bro. S.Suresh
மக்களவை உறுப்பினர் – Bro. S.Gnanathiraviam (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Esakki Subaya (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. R.Rajeswaran
நகராட்சி தலைவர் – Bro. K.K.C. Prabhakara Pandian
நகராட்சி துணை தலைவர் – Bro. A.Sivasubramanian
Chief Judicial Magistrate – Bro. S. Manojkumar (Tirunelveli)
Principal Sub Judge – Bro. M. Amirtha Velu (Tirunelveli)
Principal District Judge – Sis. C.P.M. Chandra
Sub Judge – Bro. K. Senthil Kumar (Ambasamudram)
Additional District Munsif – Bro. P. Kumar (Ambasamudram)
Judicial Magistrate – Bro. A. Palkalaiselvan (Ambasamudram)
ஜெபிப்போம்
பத்தமடை (Pathamadai) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு தயாரிக்கப்படும் பத்தமடை பாய் மிக பிரபலமானதாகும். பத்தமடை பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
திருநெல்வேலியிலிருந்து 24 கிமீ தொலைவில் அமைந்த பத்தமடை பேரூராட்சிக்கு அருகமைந்த ஊர்கள்; கிழக்கே மேலச்சேவல் (4கிமீ); மேற்கே சேரன்மாதேவி (4 கிமீ); தெற்கே கங்கனக்குளம் கிராமம் (4 கிமீ) உள்ளது.
பத்தமடை பேரூராட்சி திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் Bro. S.Gnanathiraviam அவர்களுக்காகவும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் Bro. Esakki Subaya அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களை கர்த்தருடைய கரம் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
பத்தமடை பேரூராட்சியானது 7.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 109 தெருக்களும் கொண்டுள்ளது. இப்பேரூராட்சியின் நகராட்சி ஆணையர் Bro. R.Rajeswaran அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. K.K.C. Prabhakara Pandian அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. A.Sivasubramanian அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற பணிகளில் தேவசித்தம் நிறைவேறிட ஜெபிப்போம். இந்த பேரூராட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக ஜெபிப்போம்.
பத்தமடை டவுன் பஞ்சாயத்தில் 16,625 மக்கள் தொகை உள்ளது. இதில் 8,106 ஆண்கள் மற்றும் 8,519 உள்ளனர். இந்த நகரத்தில் 4,166 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். மக்கள்தொகையில் இந்துக்கள் 59.09% பேரும், முஸ்லிம்கள் 40.10% பேரும், கிறிஸ்தவர்கள் 0.58% பேரும், சீக்கியர் 0.02% பேரும் மற்றும் பிற மதங்களை சேர்ந்தவர்கள் மற்றவை 0.03% பேரும் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் குறைவாக உள்ள இந்த பேரூராட்சியில் அநேக தேவபிள்ளைகள் கர்த்தருக்கென்று எழும்பிட ஜெபிப்போம்.
பத்தமடை நகரத்தின் கல்வியறிவு விகிதம் மாநில சராசரியான 80.09% ஐ விட 86.23% அதிகமாக உள்ளது. பத்தமடையில் ஆண்களின் கல்வியறிவு 92.25% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 80.56% ஆகவும் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள பள்ளிகளுக்காகவும், மாணவர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகையில் 6,759 பேர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 4,486 ஆண்கள் மற்றும் 2,273 பெண்கள் உள்ளனர். இவர்களுக்காகவும், இவர்கள் செய்கின்ற பணிகளுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பங்களுக்காகவும், குடும்பத்தின் தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.
பத்தமடைப் பாய், (Pathamadai Grass mat) திருநெல்வேலி மாவட்டத்தின், பத்தமடை எனும் ஊரில் ஓடும் தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் வளரும் கோரைப்புற்களால் நெய்யப்படும் பாய்கள். இப்பாய்கள், 100 முதல் 140 பாவுப் பருத்தியாலோ பட்டு இழைகளாலோ நெய்யப்படுகின்றன. பிற பாய்களை விட இவை மெல்லியதாகவும், மென்மையாகவும், குளிர்ச்சியாகவும் உடலுக்கு ஏற்றதாகவும் உள்ளன. பத்தமடைப் பாய் புவிசார் தகுதி பெற்று, புவிசார் குறியீட்டுப் பதிவேட்டில் இடம் பிடித்துள்ளது.
பெரும்பாலான பாய்கள் பருத்திப் பாவாலும் கோரை ஊடையாலும் நெய்யப்படுகிறது. கோரை சைபெராசியே புல்லினத்தைச் சேர்ந்த தாவரமாகும். பத்தமடைப் பாயின் நெசவுமுறை அரியது மட்டுமல்ல, இதை நெய்யும் கைத்தொழிலும் கலையும்மிக நுட்பமான வடிவமைப்புகளைப் பிணைமுறையும் இந்த வட்டாரத்துக்கே உரிய தனிதன்மை உடையதாகும். இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.