Daily Updates

தினம் ஓர் ஊர் – நார்த்தாமலை (Narthamalai)

தினம் ஓர் ஊர் – நார்த்தாமலை (Narthamalai)

மாவட்டம் – புதுக்கோட்டை

தாலுக்கா – குளத்தூர்

மாநிலம் – தமிழ்நாடு

மக்கள் தொகை –  1,950

மக்களவைத் தொகுதி – திருச்சிராப்பள்ளி

சட்டமன்றத் தொகுதி – கந்தர்வகோட்டை

மாவட்ட ஆட்சியர் – Sis. M. Aruna, I.A.S.

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Thiru. Abishek Gupta

மாவட்ட வருவாய் அலுவலர் – Bro. Sadheesh R

Chief Judicial Magistrate  – Bro. K.S. Paulpandian (Pudukkottai)

Principal Subordinate Judge  – Bro. V. Venkatesaperumal (Pudukkottai)

ஜெபிப்போம்

நார்த்தாமலை ஊராட்சி (Narthamalai Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது. நார்த்தாமலை ஊராட்சி குளத்தூர் தாலுக்காவில் உள்ளது. இந்த ஊராட்சி, கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1950 ஆகும். இவர்களில் பெண்கள் 969 பேரும் ஆண்கள் 981 பேரும் உள்ளனர்.

மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையன் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மை மலை, மண் மலை, மற்றும் பொன்மலை என்று 9 வகையான மலைக் குன்றுகளால் சூழப்பட்டது நார்த்தாமலை கிராமம். முத்தரையர்கள், சோழர் மற்றும் பாண்டியர்கள் ஆட்சி செய்த காலத்தில் இது வாணிபத்தின் முக்கிய பகுதியாக விளங்கியது. ஆயுடையான்காடு, பொம்மாடிமலை, மணியடிபட்டி, சமத்துவபுரம், நார்த்தாமலை, ஆதி திராவிடர்காலனி ஆகியவை இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களாகும்.

நார்த்தாமலை ஊராட்சியில் ஒட்டுமொத்தமாக 61.26% கல்வியறிவு பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் சுமார் 67.43%, பெண்கள் சுமார் 54.64% கல்வியறிவு பெற்றுள்ளனர். இங்கு சுமார் 513 குடும்பங்கள் உள்ளன. இந்த ஊராட்சியின் பரப்பளவு 660.45 ஹெக்டேர் ஆகும்.

நார்த்தாமலை ஊராட்சி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இந்த ஊராட்சி மக்களின் இரட்சிப்பிற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.