No products in the cart.

தினம் ஓர் ஊர் – திருவிதாங்கோடு (Thiruvithankodu) – 03/09/23
தினம் ஓர் ஊர் – திருவிதாங்கோடு (Thiruvithankodu)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 18723
கல்வியறிவு – 82%
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – பத்மநாபபுரம்
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. T.Mano Thangaraj (MLA)
மாநகராட்சி ஆணையாளர் – Bro. Anand Mohan
Principal District Court – Bro. P.Ramachandran (Kanyakumari)
ஜெபிப்போம்
திருவிதாங்கோடு (Thiruvithankodu) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த பேரூராட்சியை திருவிதம்கோடு என்றும் உச்சரிக்கப்படுகிறது. “திருவிதம்கோடு” என்ற வார்த்தை “திரு” என்பதிலிருந்து “செழிப்பு”, “வித்தன்” என்றால் “உள்ளிடம்” மற்றும் “குறியீடு” என்பது “இடம்” என்று பொருள்படும். திருவிதாங்கோடு பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
முன்னர் திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானத்தின் தலைநகராக திருவிதாங்கோடு இருந்தது எனவும், திரு-விதான்-கோடு என்பது மருவியே திருவாங்கூர் ஆனது என்றும் திருவாங்கூர் மேனுவலில் கூறப்பட்டுள்ளது. 1949 இல், கன்னியாகுமரி மாவட்டம் புதிதாக அமைக்கப்பட்ட திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது. முன்னாள் திருவனந்தபுரம் மாவட்டத்தின் தெற்குப் பிரிவுகளை உருவாக்கிய அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் மற்றும் விளவங்கோடு தாலுகாக்களில் உள்ள மக்கள், பெரும்பாலும் தமிழ் பேசுபவர்கள் மற்றும் தென் திருவிதாங்கூரின் தமிழ் பேசும் பெரும்பான்மையான பகுதிகளை சென்னை மாகாணத்துடன் இணைக்கக் கோரி போராட்டம் நடத்தினர்.
அதன்படி, மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் 1956 இயற்றப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டம் 1 நவம்பர் 1956 அன்று தென் திருவிதாங்கூரின் நான்கு தாலுக்காகளான அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தென் திருவிதாங்கூரில் கல்குளம் தாலுக்கின் ஒரு பகுதியாக உருவான திருவிதம்கோடு, 1 நவம்பர் 1956 முதல் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது.
மாவட்ட கலெக்டர் Bro. P.N.Sridhar அவர்களுக்காகவும், துணை மாவட்ட கலெக்டர் Bro. H.R.Koushik அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. D.N.Hari Kiran Prased அவர்களுக்காகவும், மாவட்ட வருவாய் அலுவலர் Bro. J.Balasubramaniam அவர்களுக்காகவும், District Forest Officer Bro. M.Ilayaraja (I.F.S) அவர்களுக்காகவும், Joint Director / Project Director Bro. P.Babu அவர்களுக்காகவும், மாநகராட்சி ஆணையாளர் Bro. Anand Mohan அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. T.Mano Thangaraj அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுடைய பணிகளுக்காக ஜெபிப்போம்.
திருவிதாங்கோட்டிற்குக் கிழக்கே நாகர்கோவில் 21 கி.மீ.; மேற்கே மார்த்தாண்டம் 15 கி.மீ.; வடக்கே குலசேகரம் 15 கி.மீ.; தெற்கே திங்கள்சந்தை 4 கி.மீ. தொலைவில் உள்ளன. இந்த பேரூராட்சி 5.2 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 82 தெருக்களையும் கொண்டுள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் தங்களுடைய பொறுப்பை உண்மையாக நிறைவேற்ற ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி 18723 மக்கள்தொகையை கொண்டுள்ளது. இவர்களில் ஆண்கள் 49% பேரும் மற்றும் பெண்கள் 51% பேரும் வாழ்கிறார்கள். இந்த நகரத்தில் மொத்தம் 4469 குடும்பங்கள் இருக்கிறார்கள். இங்கு வாழும் மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தருடைய பாதுகாப்பு கரத்திற்குள் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
திருவிதம்கோடில் நாடார் மற்றும் முஸ்லீம் சமூகத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர். இங்கு 10க்கும் மேற்பட்ட கோவில்களும், இரண்டு தேவாலயங்களும், ஆறு முஸ்லிம் மசூதிகள் உள்ளன. இப்பேரூராட்சியில் உள்ள வழிபாட்டு தலங்களுக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் அநேக தேவபிள்ளைகள் கர்த்தக்கென்று எழும்பி பிரகாசிக்கவும், சபைகள் கட்டப்படவும் ஜெபிப்போம்.
திருவிடங்கோடு நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம். அவர்களுடைய வேண்டிய ஞானத்தையும், பெலத்தையும் கொடுத்து அவர்களை பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.
திருவிதாங்கோடு பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் கையிட்டு செய்கின்ற வேலைகளை கர்த்தர் ஆசீர்வதித்து பாதுகாத்திட ஜெபிப்போம். சிறுபிள்ளைகளுக்காகவும், வாலிப பிள்ளைகளுக்காகவும் ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களை கர்த்தர் வல்லமையாய் எடுத்து பயன்படுத்தும்படி ஜெபிப்போம்.