No products in the cart.

தினம் ஓர் ஊர் – செந்துறை (Sendurai) – 26/04/24
தினம் ஓர் ஊர் – செந்துறை (Sendurai)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – அரியலூர்
மக்கள் தொகை – 1,11,891
கல்வியறிவு – 80.01%
மக்களவைத் தொகுதி – சிதம்பரம்
சட்டமன்றத் தொகுதி – குன்னம்
மாவட்ட ஆட்சியர் – Sis. J. Anne Mary Swarna (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. S. Selvaraj (I.P.S)
மாவட்ட வருவாய் அலுவலர் – Sis. M.S.Kalaivani
திட்ட இயக்குனர் – Sis. S. Gangatharini
மக்களவை உறுப்பினர் – Bro. Thol. Thirumavalavan (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. S S Sivashankar (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. Chithra Soniya
நகராட்சி தலைவர் – Sis. Shanthi K
நகராட்சி துணை தலைவர் – Bro. Kaliyamoorthy.T
வருவாய் ஆய்வாளர் – Bro. Rajendran.R
நகரமைப்பு அலுவலர் – Bro. Manikaselvan
Principal District and Session Judge – Bro. M.Christopher (Ariyalur)
Additional District Judge – Bro. A.Karnan (Ariyalur)
ஜெபிப்போம்
செந்துறை (Sendurai) என்பது தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் தாலுகா ஆகும். இது மாவட்டத்திற்குள் ஒரு குறிப்பிட்ட பகுதியின் நிர்வாகம் மற்றும் வருவாய் சேகரிப்புக்கு பொறுப்பாகும். இது உள்ளூர் நிர்வாக கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும், மேலும் அதன் உள்ளூர் சமூகத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. செந்துறை நகரத்திற்காக ஜெபிப்போம்.
செந்துறை வட்டம், தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் 28 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த வட்டத்தின் கீழ் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும், அவர்களின் தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.
மாவட்ட ஆட்சியர் Sis. J. Anne Mary Swarna அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. S. Selvaraj அவர்களுக்காகவும், மாவட்ட வருவாய் அலுவலர் Sis. M.S.Kalaivani அவர்களுக்காகவும், திட்ட இயக்குனர் Sis. S. Gangatharini அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
செந்துறை வட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. குன்னம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. S S Sivashankar அவர்களுக்காகவும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Thol. Thirumavalavan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் பரிசுத்த கரத்திற்குள் இவர்களை ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.
செந்துறை தாலுகாவில் 60.75% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர், இதில் 70.25% ஆண்களும் 51.45% பெண்களும் கல்வியறிவு பெற்றுள்ளனர். இந்த நகரத்தில் உள்ள பள்ளிகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இவ்வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 1,11,891 ஆகவுள்ளது. இதில் ஆண்கள் 50 சதவீதமும், பெண்கள் 50 சதவீதமும் உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 2849 குடும்பங்கள் வசிக்கின்றனர். செந்துறை வட்டத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தருடைய கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம்.
செந்துறை ஊராட்சி அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். செந்துறை ஊராட்சி மன்ற தலைவருக்காகவும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம்.
செந்துறை ஊராட்சியில் 408 குடிநீர் இணைப்புகள், 11 சிறு மின்விசைக் குழாய்கள், 8 கைக்குழாய்கள், 8 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 5 உள்ளாட்சிக் கட்டடங்கள், 15 உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள், 18 ஊரணிகள் அல்லது குளங்கள், 25 ஊராட்சி ஒன்றியச் சாலைகள், 5 ஊராட்சிச் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கொண்டுள்ளது. இதற்காக ஜெபிப்போம்.
செந்துறை தாலுகாவிற்காக ஜெபிப்போம். இந்த தாலுகாவில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுவிஷேசம் அறிவிக்கப்பட ஜெபிப்போம்.