Daily Updates

தினம் ஓர் ஊர் – ஆனையூர் (Anaiyur) – 31/03/24

தினம் ஓர் ஊர் – ஆனையூர் (Anaiyur)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – மதுரை

மக்கள் தொகை – 63,917

கல்வியறிவு – 91.67%

மக்களவைத் தொகுதி – மதுரை

சட்டமன்றத் தொகுதி – மதுரை (கிழக்கு)

District Collector – Sis. M. S. Sangeetha (IAS)

Additional Collector (D) / Project Director – Bro. S. Saravanan (IAS)

Superintendent of Police – Bro. Dongare Pravin Umesh (IPS)

District Revenue Officer – Bro. R. Sakthivel

மக்களவை உறுப்பினர் – Bro. S. Venkatesan (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. P. Moorthy (MLA)

Mayor – Sis. Indirani Pon Vasanth

Deputy Mayor – Bro.T. Nagarajan

Madurai Corporation Commissioner – Bro. C. Dinesh Kumar

Deputy Commissioner – Bro. M. Dhayanithi

Deputy Commissioner – Bro. K. Saravanan

Assistant Commissioner (North Zone) – Thiru. G. Gopu

Principal District and Sessions Judge – Bro. S. Sivakadatcham (Madurai)

ஜெபிப்போம்

ஆனையூர் (Anaiyur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இது 18 வார்டுகளுடன் செயல்பட்டுக் கொண்டிருந்தது. 2015–க்குப் பிறகு ஆனையூர் நகராட்சி, மதுரை மாநகராட்சியின் மண்டல எண் 1-இல், 3-வது வார்டு பகுதியாக செயல்படுகிறது. ஆனையூர் நகரத்திற்காக ஜெபிப்போம்.

ஆனையூர் நகரம் 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த நகரம் மதுரை மக்களவைத் தொகுதிக்கும், மதுரை (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. S. Venkatesan அவர்களுக்காகவும், மதுரை (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. P. Moorthy அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற பணிகளில் தேவ சித்தம் நிறைவேறிட ஜெபிப்போம்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த நகரத்தில் 63,917 மக்கள் வசிக்கின்றார்கள். இவர்களில் 32,114 ஆண்கள், 31,803 பெண்கள் ஆவார்கள். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 85.09% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிறிஸ்தவர்கள் 8.81% இஸ்லாமியர்கள் 5.90% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். ஆனையூரில் 16,351 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். ஆனையூரில் வசிக்கும் மக்களுக்காகவும், அவர்களின் தேவைகளுக்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தருடைய பாதுகாப்பு கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.

ஆனையூர் மக்களின் சராசரி கல்வியறிவு 91.67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.42%, பெண்களின் கல்வியறிவு 87.92% ஆகும். இந்த நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் மற்றும் மாணவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

ஆனையூர் நகரத்தில் உள்ள மொத்த மக்கள்தொகையில், 24,478 பேர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 18,378 ஆண்கள் மற்றும் 6,100 பெண்கள்.  இவர்களில் 839 முக்கிய விவசாயத் தொழிலாளர்கள், 426 வீட்டுத் தொழில்கள், 20,906 இதரத் தொழிலாளர்கள், 1,953 குறு தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நகரத்தில் உள்ள தொழிலாளர்களுக்காகவும், அவர்கள் செய்கின்ற வேலைகளுக்காகவும் ஜெபிப்போம், கர்த்தர் அவர்களையும், அவர்களது குடும்பத்தையும் ஆசீர்வதித்து பாதுகாத்துகொள்ள ஜெபிப்போம்.

ஆனையூர் நகரத்திற்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள குடும்பங்களுக்காகவும், இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம். ஆனையூர் நகரத்தில் கிறிஸ்தவர்கள் குறைவாக இருக்கிறார்கள், அதற்காக நாம் பாரப்பட்டு ஜெபிப்போம். இந்த பகுதியில் அநேக தேவபிள்ளைகளை கர்த்தர் எழுப்பி தரும்படி ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.