No products in the cart.

தினம் ஓர் ஊர் – அலங்காநல்லூர் (Alanganallur) – 14/03/24
தினம் ஓர் ஊர் – அலங்காநல்லூர் (Alanganallur)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – மதுரை
மக்கள் தொகை – 88,785
கல்வியறிவு – 78.71%
மக்களவைத் தொகுதி – தேனி
சட்டமன்றத் தொகுதி – சோழவந்தான்
District Collector – Sis. M. S. Sangeetha (IAS)
Additional Collector (D) / Project Director – Bro. S. Saravanan (IAS)
Superintendent of Police – Bro. Dongare Pravin Umesh (IPS)
District Revenue Officer – Bro. R. Sakthivel
மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. A. Venkatesan (MLA)
Mayor – Sis. Indirani Pon Vasanth
Deputy Mayor – Bro.T. Nagarajan
Madurai Corporation Commissioner – Bro. C. Dinesh Kumar
Deputy Commissioner – Bro. M. Dhayanithi
Deputy Commissioner – Bro. K. Saravanan
Principal District and Sessions Judge – Bro. S. Sivakadatcham (Madurai)
Judicial Magistrate – Sis. S. Vengatalakshmi
ஜெபிப்போம்
அலங்காநல்லூர் (Alanganallur) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். தமிழகத்தின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு இந்த ஊரின் மற்றொரு முக்கிய அடையாளமாகும். அலங்காநல்லூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
அலங்காநல்லூர் பேரூராட்சி சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. A. Venkatesan அவர்களுக்காகவும், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் P. Ravindhranath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
அலங்காநல்லூர் நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. Madurai Mayor Sis. Indirani Pon Vasanth அவர்களுக்காகவும், Deputy Mayor Bro.T. Nagarajan அவர்களுக்காகவும், Madurai Corporation Commissioner Bro. C. Dinesh Kumar அவர்களுக்காகவும், Deputy Commissioner Bro. M. Dhayanithi அவர்களுக்காகவும், Deputy Commissioner Bro. K. Saravanan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டத்தில் உள்ள பதிமூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தில் முப்பத்தி ஏழு ஊராட்சிகள் உள்ளன. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அலங்காநல்லூரில் இயங்குகிறது. அலங்காநல்லூ ஊராட்சி மன்ற தலைவருக்காகவும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம்.
அலங்காநல்லூர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 88,785 ஆகும். இதில் ஆண்கள் 44,649 பேரும், பெண்கள் 44,136 பேரும் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 96.75% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிறிஸ்தவர்கள் 1.19%, இஸ்லாமியர்கள் 0.81%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். அலங்காநல்லூரில் 3,171 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் தேவைகளுக்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
இந்த நகரத்தை சுற்றிலும் அதிக பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. நெல், கரும்பு, தென்னை மற்றும் வாழைப்பயிர் முக்கியப் பயிர்கள். அலங்காநல்லூரில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள விவசாய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
அலங்காநல்லூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள குடும்பங்களுக்காகவும், இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம். இந்த பகுதியில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், அநேக ஆத்துமாக்கள் தேவனை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம். அலங்காநல்லூர் பேரூராட்சியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம்.