No products in the cart.
தினம் ஓர் ஊர் – ஆழ்வார்குறிச்சி (Alwarkurichi) – 27/02/25
தினம் ஓர் ஊர் – ஆழ்வார்குறிச்சி (Alwarkurichi)
மாவட்டம் – தென்காசி
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 10,043
கல்வியறிவு – 86.8%
மாவட்ட ஆட்சியர் – Bro. Dr. G.S.Sameeran, I.A.S
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – Bro. Aravind, T.P.S.
District Revenue Inspector – Bro. M.Nagaranjan
மக்களவைத் தொகுதி – திருநெல்வேலி
சட்டமன்றத் தொகுதி – ஆலங்குளம்
Principal District Judge – Bro. B. Rajavel (Tenkasi)
Additional District Judge – Bro. S. Manojkumar (Tenkasi)
Chief Judicial Magistrate – Bro. C.Kathiravan (Tenkasi)
ஜெபிப்போம்
ஆழ்வார்குறிச்சி (Alwarkurichi) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது திருநெல்வேலிக்கு மேற்கில் 58 கிமீ தொலைவிலும், தென்காசிக்கு தெற்கில் 23 கிமீ தொலைவிலும், வடக்கில் அம்பாசமுத்திரம் 12 கிமீ தொலைவிலும், கிழக்கில் விக்கிரமசிங்கபுரம் 10 கிமீ தொலைவிலும் உள்ளது.
ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. ஆழ்வார்குறிச்சி நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது.
ஆழ்வார்குறிச்சி டவுன் பஞ்சாயத்தில் 10,045 மக்கள் தொகை உள்ளது, இதில் 4,907 ஆண்கள் மற்றும் 5,138 பெண்கள். ஆழ்வார்குறிச்சியின் (TP) மொத்த மக்கள் தொகையில் 9.82 % ஆகும் 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 986 ஆகும். ஆழ்வார்குறிச்சியில் ஆண்களின் கல்வியறிவு 92.50% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 81.50% ஆகவும் உள்ளது. ஆழ்வார்குறிச்சி டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் 2,793 வீடுகளுக்கு குடிநீர், சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் உள்ளன. மொத்த மக்கள்தொகையில் இந்து 89.27%, முஸ்லிம் 7.12%, கிறிஸ்தவர்கள் 3.55%, சீக்கியர் 0.00% மற்றும் பௌத்த 0.01% உள்ளனர்.
இந்த நகரத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 5,101 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 2,946 ஆண்கள், 2,155 பெண்கள். மொத்த 5101 உழைக்கும் மக்களில், 95.69 % பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர், மொத்த தொழிலாளர்களில் 4.31 % பேர் விளிம்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆழ்வார்குறிச்சி நகரத்திற்காக ஜெபிப்போம். இங்கு வாழும் மக்களுடைய தேவைகளுக்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். அவர்கள் கையிட்டு செய்கின்ற வேலைகளை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள குடும்பங்களில் கர்த்தருடைய ஆளுகை இருக்க ஜெபிப்போம். ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், திருநெல்வேலி மக்களவை உறுப்பினருக்காகவும், ஜெபிப்போம். சிவகிரி நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.