Daily Updates

தினம் ஓர் ஊர் – மணல்மேடு (Manalmedu) – 02/01/25

தினம் ஓர் ஊர்மணல்மேடு (Manalmedu)

மாவட்டம் – மயிலாடுதுறை

மாநிலம் – தமிழ்நாடு

பரப்பளவு – 15.5 சதுர கிலோமீட்டர்கள் (6.0 sq mi)

மக்கள் தொகை – 9,017

கல்வியறிவு – 82.72%

District Collector  –  Bro. A. P. Mahabharathi, IAS

Superintendent of Police  – Bro. G.Stalin IPS

District Revenue Officer  – Sis. N.Umamaheswari

மக்களவைத் தொகுதி – மயிலாடுதுறை

சட்டமன்றத் தொகுதி – மயிலாடுதுறை

மக்களவை உறுப்பினர் – Sis. R. Sudha (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. S. Rajakumar (MLA)

Corporation Commissioner – Bro. N. Baskar (Mayiladuthurai)

Municipal Engineer – Bro. R. Jayaseelan

Chairman – Bro. N. SELVARAJ (Mayiladuthurai)

Vice – Chairman  – Bro. S. Sivakkumar (Mayiladuthurai)

District and Sessions Judge  – Sis. R.Vijayakumari (Mayiladuthurai)

Chief Judicial Magistrate  – Bro. M.K.Mayakrishnan (Mayiladuthurai)

ஜெபிப்போம்

மணல்மேடு (Manalmedu) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். மணல்மேட்டிற்கு நாகநாதபுரம் என்ற பழைய பெயரும் உண்டு.

சீர்காழி – கும்பகோணம் சாலையில் அமைந்த மணல்மேடு பேரூராட்சி, வைத்தீஸ்வரன் கோயில் 10 கி.மீ; கும்பகோணம் 30 கி.மீ; மயிலாடுதுறை 18 கிமீ; காட்டுமன்னார்கோயில் 12 கி.மீ தொலைவிலும் உள்ளது. இதனருகில் அமைந்த தொடருந்து நிலையம் மயிலாடுதுறையில் உள்ளது.

15.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 69 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதிக்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் Bro. S. Rajakumar அவர்களுக்காகவும், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் Sis. R. Sudha அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

மணல்மேடு பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 9,017 ஆகும். அதில் 4,558 ஆண்கள் ஆகவும், பெண்கள் 4,459 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 908 ஆகவுள்ளனர். இப்பேரூராட்சியில் 2,329 குடும்பங்கள் வசிக்கிறார்கள். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.85% ஆகவும், இசுலாமியர் 1.40% ஆகவும், கிறித்தவர்கள் 1.71% ஆகவும், பிறர் 0.04 % ஆகவும் உள்ளனர்.

மணல்மேட்டில் இயங்கி வந்த நூற்பாலை தற்போது அரசினர் கலை கல்லூரியாக செயல்பட்டு வருகிறது, இரண்டு மேல்நிலை பள்ளிகள், ஒரு நடுநிலை பள்ளி, இரண்டு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மணல்மேட்டிற்கு அருகில் அமைந்துள்ள புத்தமங்கலத்தில் சுதந்திர போராட்ட வீரரும், எழுத்தாளருமான கல்கி கிருஷ்ணமூர்த்தி பிறந்தார்.

இப்பேரூராட்சிக்கு அருகமைந்த கிராமங்கள் வல்லம், பாப்பாக்குடி, பெரிய இலுப்பபட்டு, சின்ன இலுப்பபட்டு, இலுப்பபட்டு, ராஜசூரியன்பேட்டை, வையாபுரிதிடல், மணல்மேடு, அகரமணல்மேடு, இராதாநல்லூர், விருதங்கநல்லூர் ஆகிய கிராமங்கள் மணல்மேடு பேரூராட்சியில் அடங்கும். இந்த கிராமத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம்.

மணல்மேடு மக்களின் சராசரி கல்வியறிவு 82 சதவீதம் ஆகும். இதல் ஆண்களின் கல்வியறிவு விழுக்காடு 91 , பெண்களின் கல்வியறிவு விழுக்காடு 74 சதவீதம் ஆகும். இவ்வூரில் ஒரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், ஒரு நடுநிலைப் பள்ளியும் , இரண்டு மெட்ரிக் பள்ளி மற்றும் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்றவை உள்ளன.

மணல்மேடு பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். மணல்மேடு பகுதியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கிற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். மணல்மேடு பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.