Daily Updates

தினம் ஓர் ஊர் – புஞ்சை தோட்டக்குறிச்சி(Punjai thottakurichi) – 04/07/24

தினம் ஓர் ஊர் – புஞ்சை தோட்டக்குறிச்சி(Punjai thottakurichi)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – கரூர்

பரப்பளவு   – 12.5 சதுர கிலோமீட்டர்கள் (4.8 sq mi)

மக்கள் தொகை – 10,969

கல்வியறிவு – 80.09%

மக்களவைத் தொகுதி – கரூர்

சட்டமன்றத் தொகுதி – அரவக்குறிச்சி

District Collector – Bro. M. Thangavel, I.A.S

Superintendent of Police – Bro. Prabhakar

District Revenue Officer – Bro. M. Kannan

Project Director – Sis. Sreelekha Thamilchelvan

மக்களவை உறுப்பினர் – Sis. Jothimani (MP)

சட்டமன்ற உறுப்பினர்  – Bro. R. Elango (MLA)

Mayor – Sis. Kavitha Ganesan

Corporation Commissioner – Bro. N. Ravichandran

Deputy Mayor – Bro. Dharani Saravanan

District Judge  – Bro. R. Shanmuga Sundaram

Chief Judicial Magistrate (Karur) – Bro. C.Sornakumar

Principal District Munsif Judge (Karur) – Sis. T.P.Sridevi

ஜெபிப்போம்

புஞ்சை தோட்டக்குறிச்சி (Punjai thottakurichi) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கரூர் – வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில், கரூரிலிருந்து 14 கிமீ தொலைவில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி உள்ளது. இதன் வடக்கில் 35 கிமீ தொலைவில் நாமக்கல் உள்ளது.

இப்பேரூராட்சி அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Bro. R. Elango அவர்களுக்காகவும், கரூர் மக்களவை உறுப்பினர் Sis. Jothimani அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி 1967ம் ஆண்டு கிராம பஞ்சாயத்தாக இருந்தது. மீண்டும் 1967ம் ஆண்டு இரண்டாம் நிலை பேரூராட்சியாகவும் 1975ம் ஆண்டு முதல் நிலை பேரூராட்சியாகவும் உயர்த்தப்பட்டது. இப்பேரூராட்சி 12.50சதுர கிலோ மீட்ட்ர் பரப்புரடையது.

புஞ்சை தோட்டக்குறிச்சி நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. Mayor – Sis. Kavitha Ganesan அவர்களுக்காகவும், Corporation Commissioner – Bro. N. Ravichandran அவர்களுக்காகவும், Deputy Mayor – Bro. Dharani Saravanan அவர்களுக்காகவும், District Judge – Bro. R. Shanmuga Sundaram அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்சாயத்தில் 10,969 மக்கள் தொகை உள்ளது, இதில் 5,426 ஆண்கள் மற்றும் 5,543 பெண்கள் உள்ளனர். இப்பேரூராட்சியில் 2,920 குடும்பங்கள் வாழ்கின்றனர். புஞ்சை தோட்டக்குறிச்சியில் ஆண்களின் கல்வியறிவு 87.36% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 65.36% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 97.86% பேரும், இஸ்லாமியர்கள் 1.52% பேரும், கிறிஸ்தவர்கள் 0.60% பேரும் மற்றும் சீக்கியர் 0.01% பேரும் உள்ளனர். இப்பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியில் விவசாயம் மற்றும் சிறு தொழிற்சாலைகளை முதன்மையாக கொண்டு வடபுறம் காவேரி ஆறு மற்றும் பாப்பூலர் முதலயார் வாய்க்காலும் கொண்டு செழிப்பு மிக்கதாகும். இப்பேரூராட்சிக்கு அருகில் காவேரி ஆற்றுப்படுகை உள்ளதால் தண்ணீர் பற்றாக்குறையின்றி பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள நீர்நிலைக்காக ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு 14.050 கி.மீ முதன்மை குழாயும் 42.050 கி.மீ பகிர்மானக்குழாயும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பேரூராட்சியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள் நான்கும், தரைமட்ட தொட்டி ஒன்றும் உள்ளது. பொது மக்களுக்கு 120.எல்.பி.சி.டி அளவு தண்ணீர் வழங்கப்படுகிறது. இப்பேரூராட்சி பகுதிகளில் 55.566 கி.மீ நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் 703 தெருவிளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவைகள் தமிழ்நாடு மின்சார வாரிய துறையினால் வழங்கப்பட்டு பேரூராட்சியின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்தெருவிளக்குகள் சராசரியாக 30 மீட்டர் தொலைவிற்கு ஒன்று அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இப்பேரூராட்சி பகுதிகளில் ஒரு பொறியியல் கல்லூரியும், ஒரு உயர்நிலைப்பள்ளி, ஒரு தனியார் பள்ளிக்கூடம், ஒரு பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி மற்றும் எட்டு பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளியும் உள்ளது. இவைகள் அனைத்தும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. மேலும், 8 அங்கன்வாடி மையங்களும் உள்ளது. இப்பேரூராட்சி பகுதிகளில் ஒரு தனியார் மருத்துவமனையும், இரண்டு அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையங்களும் உள்ளது. இதற்காக ஜெபிப்போம்,

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.