No products in the cart.

தினம் ஓர் ஊர் – ஆண்டிப்பட்டி (Andippatti)
தினம் ஓர் ஊர் – ஆண்டிப்பட்டி (Andippatti)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தேனி
மக்கள் தொகை – 212,700
கல்வியறிவு – 71.47%
மக்களவைத் தொகுதி – தேனி
சட்டமன்றத் தொகுதி – ஆண்டிப்பட்டி
மாவட்ட ஆட்சியர் – Sis. R.V.Shajeevana (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Dongare Pravin Umesh (I.P.S)
District Revenue Officer – Sis. Jeyabharathi
District Forest Officer – Bro. S.Kowtham
மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. A.Maharajan (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. M.Ganesan
நகராட்சி தலைவர் – Sis. B.Renupriya
நகராட்சி துணை தலைவர் – Bro. M.Selvam
Principal District Judge – Sis. K. Arivoli
Judicial Magistrate – Bro. T.Pitchai Rajan (Andipatti)
District Munsif – Bro. A.Kannan (Andipatti)
ஜெபிப்போம்
ஆண்டிப்பட்டி (Andippatti) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது ஆண்டிப்பட்டி, சக்கம்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி எனும் மூன்று ஊர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பேரூராட்சியாகும். ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
ரெட்டியாம்பட்டி பாளையத்தின் பாளையத்தை ஆட்சி செய்த 9-ஆவது பட்டம் ஏற்ற ராஜகம்பளம் வகையறா நீலகிரி தொப்ப நாயக்கர் மற்றும் 10-ஆவது பட்டமேற்ற அவரது மகன் காட்டாரித் தொப்ப நாயக்கர் காலத்தில் இக்கிராமம் உருவாக்கப்பட்டது. இந்த கிராமம் பிரண்டைக்காடுக்கு மேற்காகவும், சக்கிலிச்சி மலைக்கு கிழக்காகவும் உருவாக்கப்பட்டு குடிகளும் குடியமர்த்தப்பட்டனர்.
ஆண்டிப்பட்டி வட்டம் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் ஆண்டிபட்டி, கண்டமனூர், மயிலாடும்பாறை, இராஜதானி என 4 உள்வட்டங்களும், 25 வருவாய் கிராமங்களும் உள்ளது. ஆண்டிப்பட்டி நகரத்தில் உள்ள உள்வட்டங்களுக்காகவும், வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியானது ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் Bro. A.Maharajan அவர்களுக்காகவும், தேனி மக்களவைத் உறுப்பினர் Bro. P. Ravindhranath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கிற காரியங்களில் தேவசித்தம் வெளிப்பட ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
ஆண்டிப்பட்டி பேரூராட்சியானது 5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்டது. நகராட்சி ஆணையர் Bro. M.Ganesan அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. B.Renupriya அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. M.Selvam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் கடமை உண்மையாக நிறைவேற்ற ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
இவ்வட்டம் 58,902 வீடுகளும், 212,700 மக்கள்தொகையும் கொண்டது. மொத்த மக்கள்தொகையில் 107,856 ஆண்களும்; 104,844 பெண்களும் உள்ளனர். மக்கள்தொகையில் 87.2% கிராமபுறங்களில் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 97.9%, இசுலாமியர்கள் 0.38%, கிறித்தவர்கள் 1.45% & பிறர் 0.26% ஆகவுள்ளனர். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களுடைய ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.
ஆண்டிப்பட்டியின் ஒரு பகுதியாகிவிட்ட சக்கம்பட்டியில் கைத்தறி நெசவுத் தொழில் அதிக அளவில் நடைபெற்று வந்தது. தற்போது கைத்தறித் தொழில் விசைத்தறித் தொழிலாக மாற்றமடைந்து விட்டாலும் சிலர் கைத்தறிகளைக் கொண்டு நெசவு செய்து வருகின்றனர். இங்கு நெசவுத் தொழில், இங்குள்ள சாலியர் சாதியைச் சேர்ந்தவர்களால் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. சக்கம்பட்டியில் நெசவு செய்யப்பட்ட சேலைக்குச் சிறப்புப் பெயர் உண்டு. நகர எல்லை முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் கைத்தறி மற்றும் ஜவுளி ஆலைகள் நகரின் முக்கிய பொருளாதார நடவடிக்கையாக விவசாயம் உள்ளது. இதற்காக ஜெபிப்போம்.
தமிழ்நாட்டின் முக்கிய நீர்த்தேக்கமான வைகை அணை, தேனி மாவட்டம், மதுரை மண்டலத்தில் உள்ள ஆண்டிப்பட்டியிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. வைகை ஆற்றின் கரையில் வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. இது மலைகளால் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகள் இந்த இடத்திலிருந்து தொடங்குகிறது.
ஆண்டிபட்டியில் திம்மரசநாயக்கனூரில் உள்ள பரத் நிகேதன் பொறியியல் கல்லூரி உள்ளது. ஆண்டிபட்டியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்காக ஜெபிப்போம். படிக்கும் பிள்ளைகளுக்கு வேண்டிய ஞானத்தையும், பெலத்தையும் கர்த்தர் கொடுத்து அவர்களை பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம். ஆசிரியர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.