Daily Updates

தினம் ஓர் ஊர் – வேடசந்தூர் (Vedasandur) – 03/10/23

தினம் ஓர் ஊர் – வேடசந்தூர் (Vedasandur)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – திண்டுக்கல்

மக்கள் தொகை – 96,379

மொத்த பரப்பளவு  – 2.13 ச.கி.மீ

கல்வியறிவு – 75%

மக்களவைத் தொகுதி – கரூர்

சட்டமன்றத் தொகுதி – வேடசந்தூர்

மாவட்ட ஆட்சியர் – Sis. M.N. Poongodi (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. V. Baskaran (I.P.S)

District Revenue Officer – Bro. S.H.Sheik Muhaideen

மக்களவை உறுப்பினர் – Sis. S.Jothimani (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. S.Gandhirajan (MLA)

நகராட்சி ஆணையர் – Sis. R.Maheswari

மேயர் (Mayor)  – Sis. Ilamathi

துணை மேயர் (Deputy Mayor) – Bro. S.Rajappa

Principal District Judge – Sis. A.Muthu Saratha

Principal District Munsif – Bro. R.Vanjinathan

District Munsif -cum- Judicial Magistrate – Sis. Selvi.K.Sasikala

Sub Judge – Bro. G.N.Saravanakumar

ஜெபிப்போம்

வேடசந்தூர் (Vedasandur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். வேடன் சந்தையூரில் இருந்து இப்பெயர் பெற்றது. வேடன் என்றால் வேட்டைக்காரன், சந்தாய் என்றால் விற்கும் இடம் என்று பொருள்படும். வேடசந்தூர் பேரூராட்சி திண்டுக்கல் நகரத்திலிருந்து திண்டுக்கல் – கரூர் செல்லும் சாலையில் 22 கி.மீ. தொலைவில் உள்ளது. வேடசந்தூர் பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.

அன்றைய நாட்களில் திண்டுக்கல்லிற்கு வடக்கே ரங்காமலைக்கு தெற்கே இடைப்பட்ட நிலபரப்பு காட்டுப்பகுதியாக இருந்தது. அங்கு வேட்டையாடிய வேடர்கள் தங்கள் வேட்டையில் கிடைத்த பொருட்களை அதாவது விலங்குகளின் தோல்கள், கொம்பு, பாடம் செய்யப்பட்ட விலங்குகளின் உடல்கள், தேன் மற்றும் தங்கள் வேட்டையில் கிடைத்த இன்ன பிற பொருட்கள் அனைத்தையும் ஒரு இடத்தில் சந்தையிட்டனர். மக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை இந்த சந்தையில் வங்கிச் சென்றனர். வேடர்கள் இந்த இடத்தில் சந்தையிட்டதால் இவ்விடம் வேடன் சந்தையூர் என அழைக்கப்பட்டது. வேடன் சந்தையூர் காலப்போக்கில் மருவி வேடசந்தூர் ஆனது.

மாவட்ட கலெக்டர் Sis. M.N. Poongodi அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. V. Baskaran அவர்களுக்காகவும், மாவட்ட வருவாய் அலுவலர் Bro. S.H.Sheik Muhaideen அவர்களுக்காகவும், நகராட்சி ஆணையர் Sis. R.Maheswari அவர்களுக்காகவும், மேயர் Sis. Ilamathi அவர்களுக்காகவும், துணை மேயர் Bro. S.Rajappa அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.

வேடசந்தூர் வட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் 63 வருவாய் கிராமங்கள் உள்ளன. வேடசந்தூர் என்பது திண்டுக்கல் நகரத்திலிருந்து 21 கிமீ (13 மைல்), ஒட்டன்சத்திரம் நகரத்திலிருந்து 25 கிமீ (16 மைல்), மதுரையிலிருந்து 82 கிமீ (51 மைல்) தொலைவில் உள்ளது. வேடசத்தூர் நகரத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இவ்வூராட்சி ஒன்றியத்தில் 22 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளன. வேடசந்துர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பஞ்சாயத்திற்கு கிராமங்களுக்காக ஜெபிப்போம். ஊராட்சி மன்ற தலைவருக்காகவும், ஊராட்சி மன்ற துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம். அவர்களுடைய பணிகளுக்காக ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி, 2.13 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 65 தெருக்களும் கொண்டது. வேடசந்தூர் பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 96,379 ஆகும். இதில் ஆண்கள் 47,848 பேரும், பெண்கள் 48.531 ஆக உள்ளனர். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காக அவர்களின் தேவைகளுக்காகவும் ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களில் இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியானது வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. வேடசந்தூர் சட்டமன்றத் உறுப்பினர் Bro. S.Gandhirajan அவர்களுக்காகவும், கரூர் மக்களவைத் உறுப்பினர் Sis. S.Jothimani அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

வேடசந்தூர் பேரூராட்சியை சுற்றிலும் பல நூற்பு ஆலைகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள நூற்பு ஆலைகளுக்காக ஜெபிப்போம். நூற்பு ஆலைகளில் வேலை செய்கின்ற அதிகாரிகளுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும், ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.