No products in the cart.

தினம் ஓர் ஊர் – கருங்கல் (Karungal) – 07/09/23
தினம் ஓர் ஊர் – கருங்கல் (Karungal)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 16,691
மொத்த பரப்பளவு – 18.93 ச.கி.மீ
கல்வியறிவு – 91.91 %
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – கிள்ளியூர்
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. S.Rajeshkumar (MLA)
மாநகராட்சி ஆணையாளர் – Bro. Anand Mohan
Principal District Court – Bro. P.Ramachandran (Kanyakumari)
ஜெபிப்போம்
கருங்கல் (Karungal) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி மற்றும் சிறு நகரம் ஆகும். கருங்கல் பேரூராட்சி, கன்னியாகுமரியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் கிழக்கே 10 கி.மீ. தொலைவில் தக்கலை; வடக்கே மார்த்தாண்டம் 8 கி.மீ. தொலைவிலும்; தெற்கே குளச்சல் 8 கி.மீ. தொலைவிலும் உள்ளன. கருங்கல் பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சி பணிகளுக்காக ஜெபிப்போம்.
மாவட்ட கலெக்டர் Bro. P.N.Sridhar அவர்களுக்காகவும், துணை மாவட்ட கலெக்டர் Bro. H.R.Koushik அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. D.N.Hari Kiran Prased அவர்களுக்காகவும், மாவட்ட வருவாய் அலுவலர் Bro. J.Balasubramaniam அவர்களுக்காகவும், District Forest Officer Bro. M.Ilayaraja (I.F.S) அவர்களுக்காகவும், Joint Director / Project Director Bro. P.Babu அவர்களுக்காகவும், மாநகராட்சி ஆணையாளர் Bro. Anand Mohan அவர்களுக்காகவும் Principal District Court Judge Bro. P.Ramachandran அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை ஆளுகை செய்திட ஜெபிப்போம்.
கருங்கல் என்பது தமிழ்நாட்டின் 234வது தொகுதியான கிள்ளியூரில் உள்ள முக்கிய நகரமாகும். மார்த்தாண்டத்திற்குப் பிறகு, இது அடுத்த நன்கு அறியப்பட்ட நகரமாகும். இப்பேரூராட்சி கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கிள்ளியூர் பேரூராட்சியின் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. S.Rajeshkumar அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை உண்மையோடு நிறைவேற்ற ஜெபிப்போம்.
கருங்கல் பேரூராட்சி 18.93 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 48 தெருக்களும் கொண்டுள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள வார்டுகளுக்காக, வார்டு கவுன்சிலர்களுக்காக ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டுகளிலும் உள்ள மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட ஜெபிப்போம். கவுன்சிலர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி 16,691 மக்கள்தொகையை கொண்டது. இவர்களில் 8,030 ஆண்களும், 8,661 பெண்களும் ஆவார்கள். 10.07% அதாவது, இவர்களில் 1,680 பேர் ஆறு வயதுக்குட்பட்டோராவர். இந்த நகரத்தில் 4,368 குடும்பங்கள் வாழ்கிறார்கள். கருங்கலின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 34.68 சதவீதம் இந்துக்களும், 0.25 சதவீதம் முஸ்லீம்களும், 64.75 சதவீதம் கிறிஸ்தவர்களும், 0.30 சதவீதம் மற்ற மதங்களை சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களுடைய ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம்.
இப்பகுதியில், விவசாயம் மிகக் குறைந்த அளவே நடைபெறுகிறது. அதற்குக் காரணம், விவசாய நிலம் அரிதாகிப் போனதே ஆகும். பெரும்பாலான மக்கள் கூலிவேலையிலேயே ஈடுபடுகின்றனர். வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும், இப்பகுதி மக்கள் பொருளீட்டுவதற்காகப் பயணிக்கின்றனர். கணிசமானோர் இராணுவம் போன்ற சேவை சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நகரத்தில் பல்வேறு தொழில்கள் மற்றும் சேவை பணியில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம்.
கருங்கல் பேரூராட்சியின் கல்வியறிவு விகிதம் 91.91 %. இதில் ஆண்கள் 86% பேரும் மற்றும் பெண்கள் 82% பேரும் கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள். இந்த பேரூராட்சியில் உள்ள படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம். படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் வாலிப பிள்ளைகளுக்கு கர்த்தர் நல்ல வேலையை கொடுக்கும்படி ஜெபிப்போம். ஆகும்.
கருங்கல் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்யும்படி ஜெபிப்போம். ஆண்டவருடைய வார்த்தை ஒவ்வொரு கிராமங்களிலும் விதைக்கப்பட ஜெபிப்போம். அதன்மூலம் அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.