Daily Updates

தினம் ஓர் ஊர் – சுந்தரபாண்டிபுரம்(Sundarapandiapuram) – 11/08/23

தினம் ஓர் ஊர் – சுந்தரபாண்டிபுரம்

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – தென்காசி

மக்கள் தொகை – 8988

கல்வியறிவு – 65%

மக்களவைத் தொகுதி – தென்காசி

சட்டமன்றத் தொகுதி – தென்காசி

மாவட்ட ஆட்சியர் – Bro. Durai Ravichandran (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. E.T.Samson (I.P.S)

District Revenue Inspector – Bro. M.Nagaranjan

Special Revenue Inspector – Bro. A.Abdul Kadar @ Abu

மக்களவை உறுப்பினர் – Bro. Dhanush M.Kumar (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. S.Palani Nadar (MLA)

நகராட்சி ஆணையர் – Sis. S.M.Farijan (Tenkasi)

நகராட்சி தலைவர் –  Bro. R.Sadhir

நகராட்சி துணை தலைவர் – Bro. K.N.L.Subbaiah

Municipal Engineer – Bro. R.Jayaseelan

Principal District Munsif – Bro. K. Baskar

Additional District Judge – Sis. G.Anuradha

ஜெபிப்போம்

சுந்தரபாண்டிபுரம் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை பேருராட்சி ஆகும். இது அதன் அழகிய சூரியகாந்தி வயல்களுக்கு மிகவும் பிரபலமானது. மேலும் பழமையான கோவில்கள் மற்றும் இயற்கை அழகுக்காக அறியப்படுகிறது. இது பல தமிழ் திரைப்படங்கள் மற்றும் பிராந்திய சிட்காம்களுக்கான பிரபலமான அமைப்பாகும். சுந்தரபாண்டிபுரம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

இந்த பேரூராட்சி திருநெல்வேலியிலிருந்து 55 கிமீ தொலைவிலும்; தென்காசியிலிருந்து 10 கிமீ தொலைவிலும்;சுரண்டையிலிருந்து 3 கிமீ தொலைவிலும்; சாம்பவர் வடகரையிலிருந்து 4 கிமீ தொலைவிலும்; பாவூர்சத்திரத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்த சுந்தரபாண்டிபுரம் பேரூராட்சியின் அருகில் உள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.

சுந்தரபாண்டிபுரம் 13.18 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 72 தெருக்களும், 2532 வீடுகளையும் கொண்டுள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளுக்காகவும், ஒவ்வொரு தெருக்கள் மற்றும் வீடுகளுக்காகவும் ஜெபிப்போம். 15 வார்டுகளில் உள்ள கவுன்சிலர்களுக்காக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளுக்காக ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. தென்காசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் Bro. S.Palani Nadar அவர்களுக்காகவும், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Dhanush M.Kumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். தங்கள் பொறுப்பினை உண்மையாக நிறைவேற்ற ஜெபிப்போம்.

மாவட்ட கலெக்டர் Bro. Durai Ravichandran அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. E.T.Samso அவர்களுக்காகவும், மாவட்ட வருவாய் ஆணையர் Bro. M.Nagaranjan அவர்களுக்காகவும், சிறப்பு மாவட்ட வருவாய் ஆணையர் Bro. A.Abdul Kadar @ Abu அவர்களுக்காகவும், ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆசீர்வதித்து வழிநடத்திட ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியில் மொத்தம் 8988 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் ஆண்கள் 50% மற்றும் பெண்கள், 50% பேர் உள்ளார்கள். இது நகரத்தின் சராசரி கல்வியறிவு 65% ஆக உள்ளது. இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். குடும்பங்களை பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.

இந்த கிராமத்தின் முக்கிய பொருளாதாரம் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகும். முக்கிய பயிர்கள் நெல் நெல், சூரியகாந்தி விதைகள், பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் தென்னை விவசாயம் ஆகும். இங்கு வாழும் மக்களின் பிராதன தொழிலாக விவசாயமே ஆதிமுதல் இன்று வரை உள்ளது. அதற்கு மூல காரணமாக இங்கு அமைந்த பெரிய குளமே ஆகும். மேலும் இவ்வூரின் மக்கள் தத்தமது குல தொழில்களையும் (மட்பாண்டம் செய்தல், தயிர் கடைதல், மீன்பிடித்தல், கூடைமுடைதல் போன்ற தொழில்களையும்) செய்து வருகின்றனர். இங்கு வாழும் மக்களுக்காக ஜெபிப்போம். பல்வேறு தொழில்களை செய்கின்ற மக்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர் அவர்களையும் அவர்களது குடும்பத்தையும் ஆசீர்வதித்து பாதுகாத்துகொள்ளும்படி ஜெபிப்போம்.

சுந்தரபாண்டிபுரம் அதிகளவில் பசுமை போர்த்திய வயல்வெளிகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகள் நிறைந்துள்ளதால் தமிழக மற்றும் வெளிமாநில திரைப்படத்துறையினரின் மிகமிக விருப்பம்மான தளமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சுற்றுலாப் பயணிகள் வழக்கமாக சுந்தரபாண்டியபுரத்திற்கு ஒரு நாள் சுற்றுப்பயணத்தைத் திட்டமிடுகிறார்கள் மற்றும் சிறந்த காட்சிகளைப் பெற சூரியகாந்தி வயல்களை அதிகாலையில் பார்வையிடுகிறார்கள். ஜூலை மாத இறுதியில், பூக்கள் முழுமையாக பூக்கும், ஆகஸ்ட் நடுப்பகுதியில் வெட்டப்படும். சுந்தரபாண்டியபுரம் சூரியகாந்தி வயலுக்குப் பெயர்பெற்றது.

ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோயில் சுந்தரபாண்டியபுரம் நகரத்தில் உள்ள மிகப் பழமையான கோயிலாகும். இது சுமார் 4000 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீ முப்பாடாத்தி அம்மன் கோவில் ஆகியவை நகரத்தின் மற்ற புகழ்பெற்ற கோவில்கள் ஆகும்.

சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள வாலிப பிள்ளைகளுக்காக, சிறுபிள்ளைகளுக்காக ஜெபிப்போம். இவர்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் ஆண்டவருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.