No products in the cart.
தினம் ஓர் ஊர் – புனல்குளம் (Punalkulam)

தினம் ஓர் ஊர் – புனல்குளம் (Punalkulam)
மாவட்டம் – புதுக்கோட்டை
ஊராட்சி ஒன்றியம் – கந்தர்வகோட்டை
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 2,032
மக்களவைத் தொகுதி – திருச்சிராப்பள்ளி
சட்டமன்றத் தொகுதி – கந்தர்வகோட்டை
*மாவட்ட ஆட்சியர் – Sis. M. Aruna, I.A.S.v
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Thiru. Abishek Gupta
மாவட்ட வருவாய் அலுவலர் – Bro. R. Sadheesh
Chief Judicial Magistrate – Bro. K.S. Paulpandian (Pudukkottai)
Principal Subordinate Judge – Bro. V. Venkatesaperumal (Pudukkottai)
District Munsif cum Judicial Magistrate – Bro. N. Sivapalani (Gandarvakkottai)
ஜெபிப்போம்
புனல்குளம் ஊராட்சி (Punalkulam Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தவர்வ கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது. புனல்குளம் ஊராட்சி கந்தர்வகோட்டை தாலுக்காவில் உள்ளது. இந்த ஊராட்சி, கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2032 ஆகும். இவர்களில் பெண்கள் 987 பேரும் ஆண்கள் 1045 பேரும் உள்ளனர்.
புனல்குளம் ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்: காடவராயன்பட்டி, தெத்துவாசல்பட்டி, புனல்குளம்.
புனல்குளம் ஊராட்சியில் ஒட்டுமொத்தமாக 75.39% கல்வியறிவு பெற்றுள்ளனர். இங்கு சுமார் 492 குடும்பங்கள் உள்ளன. இந்த ஊராட்சியின் பரப்பளவு 1054.23 ஹெக்டேர் ஆகும்.
புனல்குளம் ஊராட்சியில் எள் பிரித்தெடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எள் குறைந்த செலவில் நிறைந்த லாபம் தரும்பயிர் ஆகும். இதற்கு தண்ணீர் செலவு குறைந்த அளவில் இருந்தால் போதும் என்பதால் விவசாயிகள் எள் கொள்முதல் செய்து, எள்ளையும், எள்ளிலிருந்து பிழிந்து எடுக்கும் நல்லெண்ணெயையும் விற்பனை செய்கின்றனர். இந்த ஊராட்சியிலுள்ள மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்காகவும் ஜெபிப்போம். இந்த ஊராட்சி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.