No products in the cart.

தினம் ஓர் ஊர்-புதூர் (Pudur) – 15/03/25
தினம் ஓர் ஊர்-புதூர் (Pudur)
வட்டம்-செங்கோட்டை
மாவட்டம்-தென்காசி
மாநிலம்-தமிழ்நாடு
மக்கள் தொகை-26,823
கல்வியறிவு-86.62 %
மக்களவைத் தொகுதி-தென்காசி
சட்டமன்றத் தொகுதி-கடையநல்லூர்
மாவட்ட ஆட்சியர்-Bro. Dr. G.S.Sameeran, I.A.S
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்-Bro. Aravind, T.P.S.,
Municipal Commissioner-Bro. S.Ravichandran (Kadayanallur)
Principal District Judge -Bro. B. Rajavel (Tenkasi)
Additional District Judge-Bro. S. Manojkumar (Tenkasi)
Chief Judicial Magistrate -Bro. C.Kathiravan (Tenkasi)
District Munsif cum Judicial Magistrate -Bro. M. Sunil Raja (Shencottah)
ஜெபிப்போம்
புதூர் (Pudur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். பூலாங்குடியிருப்பு, லாலாக்குடியிருப்பு, இரவியதர்மபுரம், கீழப்புதூர், மேலப்புதூர், கண்ணுபுளிமெட்டு, கேசவபுரம் ஆகியவை இணைந்ததே புதூர் (செங்கோட்டை) பேரூராட்சி ஆகும்.
புதூர் பேரூராட்சி புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்திலிருந்து 8 கி.மீ தொலைவில், கேரளா செல்லும் சாலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த ஊர்கள் குற்றாலம், செங்கோட்டை, தென்காசி ஆரியங்காவு ஆகும்.
33.21 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 42 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மககளவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3322 வீடுகளும், 12457 மக்கள்தொகையும் கொண்டது. மொத்த மக்கள்தொகையில் இந்து 75.74%, முஸ்லிம்கள் 21.28%, கிறிஸ்தவர்கள் 2.92% உள்ளனர்.
இப்பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகையில், 6,264 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 3,673 ஆண்கள் மற்றும் 2,591 பெண்கள். மொத்த 6264 உழைக்கும் மக்களில், 82.12 % பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர், மொத்தத் தொழிலாளர்களில் 17.88 % பேர் விளிம்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
புதூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சிக்கு அருகில் உள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம். புதூர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியின் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், மக்களவை உறுப்பினருக்காகவும், பேரூராட்சி தலைவருக்காகவும், துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம். புதூர் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.