Daily Updates

தினம் ஓர் ஊர் – பாண்டமங்கலம் (Paundamangalam) – 26/07/24

தினம் ஓர் ஊர் – பாண்டமங்கலம் (Paundamangalam)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – நாமக்கல்

பரப்பளவு – 5 சதுர கிலோமீட்டர்கள் (1.9 sq mi)

மக்கள் தொகை – 7,259

கல்வியறிவு – 80.45 %

District Collector – Sis. S. Uma, IAS

Superintendent of Police – Bro. S.Rajesh Kannan, I.P.S

District Revenue Officer – Bro. R.Suman

Project Director – Bro. S.Vadivel

District Forest Officer  – Bro. S.Kalanithi, I.F.S.,

மக்களவைத் தொகுதி – நாமக்கல்

சட்டமன்றத் தொகுதி – பரமத்தி-வேலூர்

மக்களவை உறுப்பினர் – Bro. Madheshwaran (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Sekar.S (MLA)

Municipal Commissioner  – Bro. K.Sennukrishnan (Namakkal)

Municipal Chairman – Bro. D.Kalanithi (Namakkal)

Municipal Engineer – Bro. A.Shanmugam (Namakkal)

Town Planning Officer – Bro. B.Rajkumar (Namakkal)

Sanitary Officer – Bro. N.Thirumoorthy (Namakkal)

Principal District Judge – Bro. R.Gurumurthy (Namakkal)

District Munsif  – Bro. S. Subramani (Paramathy)

Subordinate Judge  – Bro. S. Nalinakumar (Paramathy)

Judicial Magistrate – Bro. J. Kannan (Paramathy)

ஜெபிப்போம்

பாண்டமங்கலம் (Paundamangalam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தின் பரமத்தி வேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊருக்குப் பழைய பெயர் பாண்டவர் மங்கலம் என்றும் பிற்காலத்தில் பாண்டமங்கலம் என்றும் கூறப்படுகிறது.

பாண்டமங்கலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து நகரம் ஆகும். பரமத்தி-வேலூர் தாலுகாவில் உள்ள ஒரு சிறிய நகரமான வேலூரில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த சிறிய நகரம் வேலூர் மற்றும் ஜேடர்பாளையத்திலிருந்து சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இது திருச்சி – வேலூர் நெடுஞ்சாலையில் அமைந்த பாண்டமங்லம் பேரூராட்சி, நாமக்கல்லுக்கு தென்மேற்கே 30 கிமீ தொலைவில் உள்ளது.

இப்பேரூராட்சி பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. பரமத்தி – வேலூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. S.Sekar அவர்களுக்காகவும், நாமக்கல் மக்களவை உறுப்பினர் Bro. Madheshwaran அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களையும், இவர்கள் செய்கின்ற பணிகளையும் கர்த்தருடைய கரத்திற்குள் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.

பாண்டமங்கலம் நகர் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இப்பேரூராட்சியானது 5 சகிமீ பரப்பும், 41 தெருக்களையும் கொண்டுள்ளது. பாண்டமங்கலம் பேரூராட்சியில் உள்ள வார்டு கவுன்சிலர்களுக்காக ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டுகளில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட ஜெபிப்போம்.

பாண்டமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் 7,259 மக்கள் தொகை உள்ளது. இதில் 3,645 ஆண்கள் மற்றும் 3,614 பெண்கள் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்து 98.58% பேரும், முஸ்லிம் 1.27% பேரும், கிறிஸ்தவர் 0.04% பேரும் இருக்கிறார்கள். இப்பேரூராட்சியில்  2,071 வீடுகள் உள்ளன. பாண்டமங்கலம் நகரத்தின் கல்வியறிவு விகிதம் 80.45 % அதிகமாக உள்ளது. இதில் ஆண்களின் கல்வியறிவு 87.02% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 73.88% ஆகவும் உள்ளது.

இப்பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகையில், 3,515 பேர் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 2,341 பேர் ஆண்கள், 1,174 பேர் பெண்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கின்ற தொழில்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.

பாண்டமங்கலம் பேரூராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும், தொழிலாளர்களுக்காகவும் ஜெபிப்போம். கிறிஸ்தவர்கள் குறைவாக உள்ள இப்பேரூராட்சியில் கர்த்தருக்காக தேவபிள்ளைகள் எழும்பிட ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்படவும், சுவிசேஷம் அறிவிக்கப்படவும் ஜெபிப்போம்

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.