No products in the cart.

தினம் ஓர் ஊர் – திருபுவனம் (Thirubuvanam) – 30/12/23
தினம் ஓர் ஊர் – திருபுவனம் (Thirubuvanam)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தஞ்சாவூர்
மக்கள் தொகை – 14,989
கல்வியறிவு – 79.96%
மக்களவைத் தொகுதி – மயிலாடுதுறை
சட்டமன்றத் தொகுதி – திருவிடைமருதூர்
District Collector – Bro. Deepak Jacob, (I.A.S)
Additional Collector (Development) – Bro. H.S.Srikanth (I.A.S)
Deputy Inspector General of Police – Bro. T.Jayachandran (I.P.S)
Superintendent of Police – Bro. Ashish Rawat (I.P.S)
District Revenue Officer – Bro. T.Thiyagarajan
மக்களவை உறுப்பினர் – Bro. S.Ramalingam (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Govai.Chezhian
Mayor – Bro. Sun. Ramanathan
Commissioner & Special Officer – Sis. R. Maheshwari
Vice Mayor – Sis. Anjugam Boopathy
Principal District Judge – Sis. Jacintha Martin (Thanjavur)
Presiding Officer and
Additional District Judge – Bro. G.Sundarajan (Thanjavur)
District Munsif cum Judicial Magistrate – Bro. N.Sivapalani
ஜெபிப்போம்
திருபுவனம் (Thirubuvanam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடைமருதூர் வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும். இங்கு நெய்யப்படும் பட்டுபுடவைகள் உலக பிரசித்தம் பெற்றவையாகும். திருபுவனம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி தஞ்சாவூரிலிருந்து 56 கிமீ தொலைவில் உள்ள திருபுவனம் பேரூராட்சிக்கு அருகில் கும்பகோணம் 7 கிமீ, திருப்பனந்தாள் 20 கிமீ, திருநாகேஸ்வரம் 4 கிமீ, மயிலாடுதுறை 30 கிமீ தொலைவில் உள்ளது. இந்த பேரூராட்சிக்கு அருகில் உள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.
சோழர்களில் கடைசிப் பேரரசர் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் தனக்கு மூவுலக சக்கரவர்த்தி எனப்பொருள்படும் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டத்தை சூடிக்கொண்டான். அவன் தனது பெயரில் கும்பகோணத்திற்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் ஒரு ஊரை நிர்மாணித்தான். அது தான் திருபுவனம்.
இந்த பேரூராட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த பேரூராட்சியின் சட்டமன்ற உறுப்பினர் Bro. Govai.Chezhian அவர்களுக்காகவும், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் Bro. S.Ramalingam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற பணிகளில் தேவசித்தம் நிறைவேறிட ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியானது 5.6 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்டுள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளுக்காகவும், வார்டு உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம். அவர்களுடைய பணிகளுக்காக ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டுகளில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட ஜெபிப்போம்.
இங்கு நெசவாளர்கள் கணிசமாக வசிக்கின்ற காரணத்தால் பட்டு நெசவுத் தொழில் சிறப்புற்று விளங்குகிறது. பல கூட்டுறவு சங்கங்கள் அமைத்து அரசு பட்டுச்சேலைகளை உற்பத்தி செய்து சங்கத்தின் மூலமே விற்பனை செய்து வருகிறது. இங்கு உள்ள திகோ சில்க்ஸ் என்றழைக்கப்படும் திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கம் தான் இந்தியாவிலேயே அதிக விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கமாகும். கும்பகோணத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருபுவனத்தில் அமைந்துள்ள தலைமை அலுவலகம், தமிழ்நாடு முழுவதும் 39 கிளைகளைக் கொண்டுள்ளது. இங்கு நெய்யப்படும் பட்டுபுடவைகள் உலக பிரசித்தம் பெற்றவையாகும்.
இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 14,989 ஆகும். இதில் 50% ஆண்கள், 50% பெண்கள் உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 3,807 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். திருபுவனத்தில் சவுராஷ்டிர மக்களின் ஆதிக்கம் அதிகம். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.
திருபுவனம் மக்களின் சராசரி கல்வியறிவு 79.96% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86.67%, பெண்களின் கல்வியறிவு 73.38 % ஆகும். திருபுவனம் மக்கள் தொகையில் 9.94% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இந்த பேரூராட்சியில் மூன்று தொடக்கப்பள்ளிகளும், ஓர் அரசினர் மேல்நிலைப் பள்ளியும், திகோ சில்க்ஸ் பெண்கள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியும், சௌராஷ்டிரா மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளியும், இந்தியன் நர்சரி பிரைமரி பள்ளியும் உள்ளன. மேலும் அன்னை ஆயிஷா(ரலி)பெண்கள் அரபி மதரஸாவும் செயல்பட்டுவருகிறது. இங்கு கல்வி நிறுவனங்களுக்காகவும், படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம்.