No products in the cart.

தினம் ஓர் ஊர் – குமாரபாளையம் (Kumarapalayam) – 08/07/24
தினம் ஓர் ஊர் – குமாரபாளையம் (Kumarapalayam)
பொதுவழக்கில் கொமாரபாளையம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – நாமக்கல்
பரப்பளவு – 7.10 சதுர கிலோமீட்டர்கள் (2.74 sq mi)
மக்கள் தொகை – 71,594
கல்வியறிவு – 80.09 %
District Collector – Sis. S. Uma, IAS
Superintendent of Police – Bro. S.Rajesh Kannan, I.P.S
District Revenue Officer – Bro. R.Suman
Project Director – Bro. S.Vadivel
District Forest Officer – Bro. S.Kalanithi, I.F.S
Municipality Commissioner – Bro. K.P.Kumaran (Kumarapalayam)
Chairman – Bro. T. Vijai Kannan (Kumarapalayam)
Revenue Inspector – Bro. Gopal (Kumarapalayam)
மக்களவைத் தொகுதி – ஈரோடு
சட்டமன்றத் தொகுதி – குமாரபாளையம்
மக்களவை உறுப்பினர் – Bro. Ganeshamurthi.A (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. P. Thangamani (MLA)
Principal District Judge – Bro. R.Gurumurthy (Namakkal)
ஜெபிப்போம்
கொமரபாளையம் என்பது தென்னிந்தியாவின் பவானி ஆற்றின் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு நகராட்சி மற்றும் ஜவுளி நகரமாகும், மேலும் இது தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகாவாகும். கொமரபாளையத்தை குமாரபாளையம் என்றும் அழைப்பர். இந்நகரம் விசைத்தறி கூடங்களுக்கு பெயர் பெற்றது.
குமாரபாளையம் நகரம் 30 மார்ச் 1978 இல் நகர பஞ்சாயத்து நிலையிலிருந்து மூன்றாம் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது, பின்னர் 17 ஏப்ரல் 1984 முதல் இரண்டாம் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 1990இல் இருந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் படி முதல் தர நகராட்சியாக செயல்படுகிறது.
கொமராபாளையம் மற்றும் பவானி ஆகியவை காவிரி ஆற்றால் பிரிக்கப்பட்ட இரட்டை நகரங்கள் ஆகும். ஆனால், பவானி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தது . கொமாரபாளையம் ஜவுளித் தொழில்களுக்குப் பெயர் பெற்றது; மேலும் குமாரபாளையம் பாரம்பரிய தோல் சப்பல்களுக்கு பிரபலமானது.
மாவட்ட ஆட்சியர் – Sis. S. Uma அவர்களுக்காகவும், Superintendent of Police Bro. S.Rajesh Kannan அவர்களுக்காகவும், District Revenue Officer Bro. R.Suman அவர்களுக்காகவும், Project Director Bro. S.Vadivel அவர்களுக்காகவும், District Forest Officer Bro. S.Kalanithi அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பரிசுத்த கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
குமாரபாளையம், தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். குமாரபாளையம் நகர் 33 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. நகராட்சி ஆணையர் Bro. K.P.Kumaran அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. T. Vijai Kannan அவர்களுக்காகவும், வருவாய் ஆய்வாளர் Bro. Gopal அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இந்த நகராட்சி குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் Bro. P. Thangamani அவர்களுக்காகவும், ஈரோடு மக்களவை உறுப்பினர் Bro. Ganeshamurthi.A அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இந்தியாவின் பல பகுதிகளுக்கும் இங்கிருந்து தான் கைலி (அ) லுங்கி (அ) வேட்டி ஏற்றுமதியாகிறது. இங்கு தயாராகும் கைலிகள் அதிக தரமானவை. குமாரபாளையமும் அதற்குப் பக்கத்திலுள்ள பள்ளிப்பாளையமும் விசைத்தறி மூலம் கைலிகள் தயாரிப்பதில் தமிழகத்திலேயே முன்னணியில் உள்ளன. 1975-க்குப் பிறகு தமிழகத்தில் காட்டன் கைலிகள் பரவலாகப் புழக்கத்தில் வர ஆரம்பித்ததிலிருந்தே இங்கு உற்பத்திகள் தொடங்கபட்டன. இங்கு சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர். 65% கைலிகள் ஏற்றுமதி இங்கிருந்து அரபு நாடுகளுக்கு செய்யப்படுகிறது.
குமாரபாளையம் நகராட்சியில் 71,594 மக்கள்தொகை உள்ளது, இதில் 35,906 ஆண்கள் மற்றும் 35,688 பெண்கள் உள்ளனர். இந்த நகராட்சியில் மொத்தம் 20,439 குடும்பங்கள் வாழ்கின்றார்கள். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 97.12%, முஸ்லீம்கள் 1.58%, கிறிஸ்தவர்கள் 1.22% உள்ளனர். பலதரப்பட்ட மக்கள் இங்கே வசிக்கின்றனர். இங்கு தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் பரவலாக பேசப்படுகின்றன. குமாரபாளையத்தில் ஆண்களின் கல்வியறிவு 86.07% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 71.62% ஆகவும் உள்ளது.
குமாரபாளையம் அதன் ஜவுளித் தொழில்கள் மற்றும் அதன் தொடர்புடைய செயல்பாடுகளுக்கு பிரபலமானது. குமாரபாளையத்தில் பல நூற்பாலைகள், நூல் சாயம் பதப்படுத்தும் அலகுகள், கையால் சாயமிடுதல் அலகுகள், நெசவு அலகுகள், காலண்டரிங் ஆலைகள், ஏற்றுமதி சார்ந்த அலகுகள் மற்றும் தொடர்புடைய துணை அலகுகள் குமாரபாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளன. மாநில அரசு, மத்திய அரசின் உதவியுடன், குமாரபாளையத்தில், ‘காவிரி ஹைடெக் நெசவு பூங்கா’ என்ற பெயரில், ஷட்டில்லெஸ் தறிகளுக்காக, உயர் தொழில்நுட்ப பூங்காவை அமைத்து வருகிறது.
குமாரபாளையம் நகராட்சிக்காக ஜெபிப்போம். நகராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்காகவும், விசைத்தறி தொழிலுக்காகவும், விசைத்தறி தொழிலாளர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும், குடும்பத்தின் தேவைகளுக்காகவும் ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காகவும், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்காக ஜெபிப்போம். குமாரபாளையம் நகராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.