SLOT GACOR HARI INI BANDAR TOTO bandar togel bo togel situs toto musimtogel toto slot
Daily Updates

தினம் ஓர் ஊர் – கல்லாக்கோட்டை (Kallakottai)

தினம் ஓர் ஊர் – கல்லாக்கோட்டை (Kallakottai)

மாவட்டம் – புதுக்கோட்டை

ஊராட்சி ஒன்றியம் – கந்தர்வகோட்டை

மாநிலம் – தமிழ்நாடு

மக்கள் தொகை –  3,984

மக்களவைத் தொகுதி – திருச்சிராப்பள்ளி

சட்டமன்றத் தொகுதி – கந்தர்வகோட்டை

மாவட்ட ஆட்சியர் – Sis. M. Aruna, I.A.S.

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Thiru. Abishek Gupta

மாவட்ட வருவாய் அலுவலர் – Bro. R. Sadheesh

Chief Judicial Magistrate  – Bro. K.S. Paulpandian (Pudukkottai)

Principal Subordinate Judge  – Bro. V. Venkatesaperumal (Pudukkottai)

District Munsif cum Judicial Magistrate – Bro. N. Sivapalani (Gandarvakkottai)

ஜெபிப்போம்

கல்லாக்கோட்டை ஊராட்சி (Kallakottai Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தவர்வ கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது. கல்லாக்கோட்டை ஊராட்சி கந்தர்வகோட்டை தாலுக்காவில் உள்ளது. இந்த ஊராட்சி, கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3984 ஆகும். இவர்களில் பெண்கள் 2008 பேரும் ஆண்கள் 1976 பேரும் உள்ளனர்.

கல்லாக்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்: மைலோங்கோண்பட்டி, கல்லாக்கோட்டை, பந்துவக்கோட்டை, புதுவயல், சத்திரப்பட்டி, ஆண்டான்தெரு, இடையன்கொல்லைப்பட்டி, கண்ணுகுடிபட்டி, முத்தன்பள்ளம், வாமடக்கொல்லை.

கல்லாக்கோட்டை ஊராட்சியில் ஒட்டுமொத்தமாக 61.20% கல்வியறிவு பெற்றுள்ளனர். இங்கு சுமார் 1,063 குடும்பங்கள் உள்ளன. இந்த ஊராட்சியின் பரப்பளவு 1226.27 ஹெக்டேர் ஆகும்.

கல்லாக்கோட்டை ஊராட்சிப் பகுதியில் எந்ததொரு அரசு தொழிற்சாலைகளும், தனியார் தொழிற்சாலைகளும் இல்லாததால் விவசாயிகள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். தென்னை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அதில் ஊடுபயிராக கடலை, உளுந்து சாகுபடி செய்து விவசாயத்தில் அசத்தி வருகிறார்கள். இந்த ஊராட்சியிலுள்ள மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்காகவும் ஜெபிப்போம். இந்த ஊராட்சி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.