Daily Updates

தினம் ஓர் ஊர் – கடலாடி (Kadaladi) – 18/03/25

தினம் ஓர் ஊர் – கடலாடி (Kadaladi)

மாவட்டம் – இராமநாதபுரம்

மாநிலம் – தமிழ்நாடு

மக்கள் தொகை – 145,277

கல்வியறிவு – 76.65%

மக்களவைத் தொகுதி – இராமநாதபுரம்

சட்டமன்றத் தொகுதி – முதுகுளத்தூர்

மாவட்ட ஆட்சியர் – Bro. Simranjeet Singh Kahlon I.A.S.

Superintendent of Police  – Bro. G.Chandeesh I.P.S.

Additional Collector DRDA – Bro. Veer Pratap Singh IAS.,

Wildlife Warden – Dr. R.Murugan I.F.S.,

District Revenue Officer – Bro. R. Govindarajalu

Principal District Judge – Bro. A.K.Mehbub Alikhan (Ramanathapuram)

District Munsif cum Judicial Magistrate – Bro. S.Sadhu Siva Subramanian (Kadaladi)

ஜெபிப்போம்

கடலாடி (Kadaladi) என்பது தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இந்த நகரம் மதுரையிலிருந்து 108 கி.மீ. முதுகுளத்தூருக்கும் சாயல்குடிக்கும் இடையே கடலாடி உள்ளது. இது இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு தாலுகா தலைமையகம் மற்றும் வருவாய் மண்டலமாகும்.

இந்த வட்டத்தின் கீழ் எஸ். தாரைக்குடி, சாயல்குடி, ஆப்பனூர், கடலாடி, மேலச்செல்வனூர் மற்றும் சிக்கல் எனும் 6 உள்வட்டங்களும் 45 வருவாய் கிராமங்களும் உள்ளது. கடலாடி ஊராட்சி ஒன்றியம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பதினொன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கடலாடி ஊராட்சி ஒன்றியம் 60 கிராம ஊராட்சிகளைக் கொண்டுள்ளது.

கடலாடி தாலுகா இராமநாதபுரம் நகரில் இருந்து தென்மேற்கே 60 கி.மீ தூரத்திலும் மதுரை நகரில் இருந்து தென்கிழக்கே 100 கி.மீ தூரத்திலும் தூத்துக்குடி நகரில் இருந்து வடகிழக்கே 70 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. சிவபெருமான் கயிலாயத்தில் இருந்து தமிழகம் வந்தபோது அவரின் பாதம் பதிந்த இடம் பர்வதமலை என்கிறார்கள். அதனாலயே கடவுள் + அடி = கடவுளடி என மலை அமைந்துள்ள கிராமத்துக்கு பெயர் வந்தது. அதுவே பின்னர் கடலாடி என பெயர் மாறியதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கடலாடி 2007 ஆம் ஆண்டு முதல், தமிழக சட்டமன்றத்தின் பிரதிநிதித்துவத்திற்காக முதுகுளத்தூர் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. கடலாடி தாலுகாவில் மொத்தம் 145,277 மக்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 73,448 பேரும், பெண்கள் 71,829 பேரும் இருக்கிறார்கள். இவ்வட்ட மக்கள்தொகையில் 89.8% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 74.81%, இசுலாமியர்கள் 17.29%, கிறித்தவர்கள் 7.62% மற்றும் பிற மதத்தினர் 0.29%  வாழ்கின்றனர். இந்த நகரத்தில் மொத்தம் 34,065 குடும்பங்கள் வாழ்கின்றனர்.

கடலாடியில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு இப்பகுதி மக்களின் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயங்களுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். விவசாயத்திற்கு தேவையான உதவிகள் கிடைத்திட ஜெபிப்போம். விளைச்சலுக்கு ஏற்ற பலனை விவசாயிகள் பெற்றுகொள்ள ஜெபிப்போம். கால்நடைகளுக்காக அவைகளின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போம்.

கடலாடி தாலுகாவிற்காக ஜெபிப்போம். கடலாடி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் ஜெபிப்போம். ஊராட்சி மன்றங்களுக்காக, ஊராட்சி மன்ற தலைவருக்காக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளுக்காக ஜெபிப்போம். கடலாடியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்களுடைய தேவைகளுக்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். கடலாடி நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.