Daily Updates

தினம் ஓர் ஊர் – இராமேஸ்வரம் (Rameshwaram) – 21/03/25

தினம் ஓர் ஊர் – இராமேஸ்வரம் (Rameshwaram)

மாவட்டம் – இராமநாதபுரம்

மாநிலம் – தமிழ்நாடு

மக்கள் தொகை – 82,675

கல்வியறிவு – 83.77%

மக்களவைத் தொகுதி – இராமநாதபுரம்

சட்டமன்றத் தொகுதி – இராமநாதபுரம்

Superintendent of Police  – Bro. G.Chandeesh I.P.S.

Additional Collector DRDA – Bro. Veer Pratap Singh IAS.,

Wildlife Warden – Dr. R.Murugan I.F.S.

District Revenue Officer – Bro. R. Govindarajalu

நகராட்சி ஆணையர் – Bro. A.Kannan (Rameswaram)

நகராட்சி தலைவர் –  Bro. K.E.Naazarkhan (Rameswaram)

நகராட்சி துணை தலைவர் – Bro. V.Dhatchanamoorthy (Rameswaram)

Principal District Judge – Bro. A.K.Mehbub Alikhan (Ramanathapuram)

District Munsif cum Judicial Magistrate – Bro. S.Ilaya Raja (Rameswaram)

ஜெபிப்போம்

இராமேசுவரம் அல்லது இராமேஸ்வரம் (Rameshwaram), தமிழ்நாடு மாநிலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இது பாம்பன் தீவில் அமைந்துள்ள நகர் ஆகும். தீபகற்ப பகுதியுடன் பாம்பன் பாலம் இத்தீவை இணைக்கின்றது. இங்கிருந்து இலங்கையின் மன்னார் தீவு 50 கிமீ தொலைவில் உள்ளது. வாரணாசிக்கு இணையான புனித வழிபாட்டுத் தலமாக இராமேசுவரமும் இந்துக்களால் கருதப்படுகின்றது. இந்தியாவின் நான்கு திசைகளில் உள்ள “சார் தாம்” எனப்படும் நான்கு புனிதத் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

பதினான்காம் நூற்றாண்டில் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் படைத்தளபதி மாலிக் கபூர் பாண்டியர்களின் எதிர்ப்பை முறியடித்து இங்கு வந்தடைந்தார். இசுலாத்தின் வெற்றியை நினைவுகூறுமுகமாக அலியா அல்-தின் கல்ட்ஜி என்ற மசூதியை நிறுவினார். பதினைந்தாவது நூற்றாண்டின் முற்பகுதியில் தற்கால இராமநாதபுரம், கமுதி, இராமேசுவரம் பகுதிகள் பாண்டிய இராச்சியத்தின் கீழ் இருந்தன. மதுரை நாயக்கர்களிடமிருந்து பிரிந்த சேதுபதிகள் இராமநாதபுரத்தை ஆளத் தொடங்கினர். 18வது நூற்றாண்டில் இப்பகுதி அடுத்தடுத்து பலமுறை சந்தா சாகிப் (1740–1754), ஆற்காடு நவாப், மருதநாயகம் (1725–1764) ஆகியோரால் கையகப்படுத்தப்பட்டது. 1947க்குப் பிறகு சுதந்திர இந்தியாவின் பகுதியாயிற்று.

1885 இன் மெட்ராஸ் பிரசிடென்சி பஞ்சாயத்து சட்டத்தின்படி, ராமேஸ்வரம் ஆங்கிலேயர் காலத்தில் பஞ்சாயத்து யூனியனாக அறிவிக்கப்பட்டது . இது 1958 இல் ஒரு நகரமாக மாறியது மற்றும் 2004 இல் நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. ராமேஸ்வரம் 21 வார்டுகளைக் கொண்ட 3 ஆம் தர நகராட்சியாகும். இராமேஸ்வரம் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இராமேஸ்வரம் வட்டம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் இராமேஸ்வரம் மற்றும் பாம்பன் என 2 வருவாய் கிராமங்கள் உள்ளது.

இந்த நகராட்சியில் மொத்தம் 82,675 மக்கள் உள்ளனர். அவர்களில் 41,946 ஆண்களும், 40,729 பெண்களும் உள்ளார்கள். இவ்வட்ட மக்கள்தொகையில் 45.7% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இதில் இந்துக்கள் 64.21%, இசுலாமியர்கள் 7.8%, கிறித்தவர்கள் மற்றும் 27.47% பிற மதத்தினர் 0.52% ஆகவுள்ளனர்.  இந்த நகரத்தில் 19,101 குடும்பங்கள் வாழ்கின்றார்கள்.

இராமேஸ்வரம் ஒரு புனித யாத்திரை நகரமாக இருப்பதால், பெரும்பான்மையான மக்கள் வர்த்தகம் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய சுற்றுலா தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சேவைத் துறை 1971 இல் 70% இல் இருந்து 2001 இல் 98.78% ஆக அதிகரித்தது, அதே சமயம் விவசாயத் துறை 1971 இல் 23% இலிருந்து 2001 இல் 0.13% ஆகக் குறைந்தது. ஒரு தீவு நகரமாக இருப்பதால், பாரம்பரிய தொழில் மீன்பிடித்தலாக இருந்தது. மீனவர்களுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஜெபிப்போம்.

இராமேஸ்வரம் நகராட்சிக்காக ஜெபிப்போம். இராமேஸ்வரம் நகராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம். நகரத்தின் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், மக்களவை உறுப்பினருக்காகவும் ஜெபிப்போம். நகராட்சி ஆணையருக்காகவும், நகராட்சி தலைவருக்காகவும், நகராட்சி துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம். நகரத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். இராமேஸ்வரம் நகராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.