No products in the cart.

தினம் ஓர் ஊர் – அருமனை (Arumanai) – 09/09/23
தினம் ஓர் ஊர் – அருமனை (Arumanai)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 16,283
கல்வியறிவு – 82%
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – விளவங்கோடு
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Sis. S.Vijayadharani (MLA)
மாநகராட்சி ஆணையாளர் – Bro. Anand Mohan
தாசில்தார் (Vilavancode) – Bro. ஆபிரகாம் டென்னி
Principal District Court – Bro. P.Ramachandran (Kanyakumari)
ஜெபிப்போம்
அருமனை (Arumanai) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியின் எல்கையாக, கிழக்கே திருவட்டாறு முதல்நிலை பேரூராட்சியும், மேற்கே முழுக்கோடு ஊராட்சியும், வடக்கே கடையால் முதல்நிலை பேரூராட்சியும், தெற்கே வெள்ளாங்கோடு ஊராட்சியும் அமையப்பெற்றுள்ளது. அருமனை பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
இந்த ஊரின் தட்பவெப்ப நிலை கேரளாவிற்கு அருகில் இருப்பதால் கேரளாவை போல் உள்ளது. இது இப்போது முதல் தர பஞ்சாயத்து நகரமாக உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகப்பெரிய ஆறு, கோதையாறு, நகரின் வடகிழக்கு மற்றும் கிழக்கு எல்லையில் பாய்கிறது. தவிர, கந்தசன்கடவு ஆறு மற்றும் பூவம்பாறை ஆறு (கோதையாற்றின் சிறிய துணை ஆறுகள்) ஆகிய இரண்டு சிறிய ஓடைகள் நகரத்தின் வழியாக பாய்கின்றன. நெடுங்குளம் குளம் அருமனைக்கு அருகிலுள்ள மற்றொரு அடையாளமாகும்.
நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் மிகவும் வளமானவை மற்றும் மேற்கு கடற்கரையின் அனைத்து வகையான தாவரங்களும் இங்கு வளர்கின்றன. இருப்பினும், 1950 களில் மாவட்டத்தின் மலைப்பாங்கான மற்றும் அரை மலைப்பாங்கான பகுதிகளில் ரப்பர் சாகுபடி அறிமுகப்படுத்தப்பட்டதால், சாகுபடி நிலங்களின் பயன்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. இப்போது மாவட்டத்தின் விளவங்கோடு தாலுக்கா மற்றும் கல்குளம் தாலுகாக்களில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்து நகரங்களில் ரப்பர் முக்கிய விவசாயப் பயிராக வளர்க்கப்படுகிறது. மேலும் இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்திற்கு மிக அருகில் இருப்பதால், ஊரில் உள்ள அனைத்து நிலங்களும் ரப்பர் வளர்க்க பயன்படுத்தப்படுகின்றன. இந்த தொழில் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சி விளவன்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். விளவன்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Sis. S.Vijayadharani அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய ஆளுகையின் கரத்திற்குள்ளாக இவர்களை ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.
அருமனை பேரூராட்சியில் 15 வார்டுகள், 21 தெருக்கள், 4,236 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வார்டு உறுப்பினர்களுக்காக அவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம். வார்டு மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலைவசதி, மின்சாரம் போன்ற தேவைகள் நிறைவேற்றப்பட ஜெபிப்போம்.
அருமனை டவுன் பஞ்சாயத்தில் 16,283 மக்கள் தொகை உள்ளது, இதில் 8,021 ஆண்கள் மற்றும் 8,262 பெண்கள் உள்ளனர். இந்த நகரத்தில் உள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். வாலிப பிள்ளைகளுக்காக, சிறுபிள்ளைகளுக்காக அவர்களின் எதிர்காலத்தை கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 5,847 பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 4,701 ஆண்கள் மற்றும் 1,146 பெண்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் செய்கின்ற வேலைகளில் கர்த்தர் அவர்களோடுகூட இருந்து பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.
அருமனையிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் ஏராளமான கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. இங்கே நடுத்தர, மேல்நிலை, உயர்நிலை மற்றும் தொடக்கப்பள்ளிகள் என அனைத்து வகைப்பள்ளிகள் அமைந்ததோடு ஆங்கிலம், தமிழ் மற்றும் மலையாளம் எனப்பல மொழிக்கல்வி முறையும் அமைந்துள்ளது. தமிழகத்தில் வெகு சில அரசுப்பள்ளிகளில் மட்டுமே ஆங்கிலம், தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிக்கல்வியும் கற்பிக்கப்படுகின்றது. அதில் அருமனை அரசு உயர்நிலைப்ப்பள்ளியும் ஒன்று என்பது இப்பகுதியின் சிறப்பான்மையாகும். மேலும் இப்பகுதியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கலைக்கல்லூரி ஒன்றும் சிறப்பே செயல்பட்டுவருகிறது. இந்த நகரத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்காக ஜெபிப்போம். படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம்.