No products in the cart.

தினம் ஓர் ஊர்-மோகனூர் (Mohanur) – 15/07/24
தினம் ஓர் ஊர்-மோகனூர் (Mohanur)
மாநிலம்-தமிழ்நாடு
மாவட்டம்-நாமக்கல்
பரப்பளவு -3 சதுர கிலோமீட்டர்கள் (1.2 sq mi)
மக்கள் தொகை-14,315
கல்வியறிவு-80.67%
District Collector-Sis. S. Uma, IAS
Superintendent of Police-Bro. S.Rajesh Kannan, I.P.S
District Revenue Officer-Bro. R.Suman
Project Director-Bro. S.Vadivel
District Forest Officer -Bro. S.Kalanithi, I.F.S.,
மக்களவைத் தொகுதி-நாமக்கல்
சட்டமன்றத் தொகுதி-நாமக்கல்
மக்களவை உறுப்பினர்-Bro. Madheshwaran (MP)
சட்டமன்ற உறுப்பினர்-Bro. P. Ramalingam (MLA)
Municipal Commissioner -Bro. K.Sennukrishnan (Namakkal)
Municipal Chairman-Bro. D.Kalanithi (Namakkal)
Municipal Engineer-Bro. A.Shanmugam (Namakkal)
Town Planning Officer-Bro. B.Rajkumar (Namakkal)
Sanitary Officer-Bro. N.Thirumoorthy (Namakkal)
Principal District Judge-Bro. R.Gurumurthy (Namakkal)
ஜெபிப்போம்
மோகனூர் வட்டம், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாமக்கல் வட்டம், சேந்தமங்கலம் வட்டம் மற்றும் பரமத்தி வேலூர் வட்டங்களை சீரமைத்து, மோகனூரைத் தலைமையிடமாகக் கொண்டு 16 ஆகஸ்டு 2018 அன்று மோகனூர் வருவாய் வட்டம் நிறுவப்பட்டது. இங்கு சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இங்கு பிறந்தார்.
பழங்காலத்தில் இப்பகுதி மக்கள் இடைத்தரகர்களாக அல்லது முகவர்களாக பணிபுரிந்தனர் என்பது ஒரு காரணம். முகவர் என்பது முகவர்களுக்கான தமிழில் சொல். எனவே அந்த இடம் முகவனூர் என்று அழைக்கப்பட்டு, பின்னர் மோகனூர் என்று பெறப்பட்டது. மேலும் மோகனூர் சோழ மண்டலத்தின் மேற்கு எல்லையாகவும், சோழ மண்டலத்தின் முகம் போன்றும் அமைந்திருப்பதால் இந்த ஊர் வரலாற்று காலத்தில் முகவனூர் என்றழைக்கப்பட்டது. பின்னாளில் மோகனூர் என்று மருவி நின்று நிலை பெற்றது.
மோகனூர் நகரத்திற்கு வடக்கில் நாமக்கல் 19 கிமீ தொலைவிலும்; கிழக்கில் காட்டுப்புத்தூர் 15 கிமீ தொலைவிலும் உள்ளது. கரூரிலிருந்து 13 கி.மீ தொலைவிலும் உள்ள மோகனூர் காவிரிக் கரையோரம் அமைந்துள்ளது. மோகனூரில் காவிரி ஆறானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. காவிரியின் மறு கரையில் வாங்கல் உள்ளது.
இந்த நகரம் நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் P. Ramalingam அவர்களுக்காகவும், நாமக்கல் மக்களவை உறுப்பினர் Bro. Madheshwaran அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுடைய பொறுப்புகளுக்காக ஜெபிப்போம்.
மோகனூரில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை தமிழ்நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த உற்பத்தி தொழிற்சாலையாகும். இதில் 1000-த்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வரை பணிபுரிகின்றனர். இந்த ஆலைக்காகவும், இதில் பணி புரியும் தொழிலாளர்களுக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.
மோகனூரில் ஜவுளி, உணவு பதப்படுத்துதல் மற்றும் கொசுவலை உற்பத்தியாளர்கள் போன்ற சில சிறிய அளவிலான தொழில்களும், ஜோஹோ கார்ப்பரேஷன் போன்ற மென்பொருள் நிறுவனங்கள் இங்கு முன்னிலையில் உள்ளன. இங்கு பல்வேறு தொழில்களை செய்துவருகின்ற குடும்பங்களுக்காகவும் கர்த்தர் அவர்களின் கையின் பிரயாசத்தை ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம்.
மோகனூர் ஊராட்சி காவிரிக் கரையோரம் அமைந்துள்ளது. காவிரி ஆற்றின் காரணமாக நிலம் மிகவும் வளமானது. இந்த ஊரின் முதுகெலும்பாக விவசாயமே அமைந்துள்ளது. இங்கு நெல், கரும்பு, வாழை, பச்சை இதழ் மற்றும் கோரை முக்கிய பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றது. கர்த்தர் விவசாய தொழிலை ஆசீர்வதிக்கவும், விவசாயிகளையும், விவசாய குடும்பங்களை பாதுகாத்து வழிநடத்தும்படி ஜெபிப்போம்.
மோகனூரில் 14,315 மக்கள் உள்ளனர். மக்கள் தொகையில் ஆண்கள் 50% மற்றும் பெண்கள் 50%. மோகனூரில் சராசரியாக 80.67% கல்வியறிவு உள்ளது. இதில் ஆண்களின் கல்வியறிவு 87.65% மற்றும் பெண்களின் கல்வியறிவு 74.04% ஆகும். மோகனூரில் 8.91% மக்கள் 6 வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இந்த நகரத்தில் மொத்தம் 3,890 குடும்பங்கள் வசிக்கின்றனர்.
மோகனூர் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைக் கொண்ட நகரம். அருகிலுள்ள கிராமங்களுக்கு காவல் நிலையம் உள்ளது. இது பல மருத்துவமனைகளையும் கொண்டுள்ளது. சேலத்தில் இருந்து கரூர் செல்லும் அகல ரயில் பாதை இந்த வழியாக செல்கிறது. மோகனூர் – வாங்கல் இடையேயான பாலம் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.
மோகனூர் வட்டத்திற்காக ஜெபிப்போம். இந்த வட்டத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். வாலிப பிள்ளைகள், சிறு பிள்ளைகள் கர்த்தருக்காய் எழும்பிட ஜெபிப்போம்.