Daily Updates

தினம் ஓர் ஊர் – மருதூர் (Marudur) – 02/07/24

தினம் ஓர் ஊர்மருதூர் (Marudur)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – கரூர்

பரப்பளவு – 29 சதுர கிலோமீட்டர்கள் (11 sq mi)

மக்கள் தொகை – 10925

கல்வியறிவு – 74.12 %

மக்களவைத் தொகுதி – பெரம்பலூர்

சட்டமன்றத் தொகுதி – குளித்தலை

District Collector – Bro. M. Thangavel, I.A.S

Superintendent of Police – Bro. Prabhakar

District Revenue Officer – Bro. M. Kannan

Project Director – Sis. Sreelekha Thamilchelvan

Municipality Commissioner – Bro. N.Nanda Kumar (Kulithalai)

Chairman – Bro. V.P.Sekar (Kulithalai)

Vice-Chairman – Bro. K.M.Senthilkumar (Kulithalai)

மக்களவை உறுப்பினர் – Bro. Arun Nehru (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. R.Manickam (MLA)

District Judge  – Bro. R. Shanmuga Sundaram

Chief Judicial Magistrate (Karur) – Bro. C.Sornakumar

Principal District Munsif Judge (Karur) – Sis. T.P.Sridevi

Principal District Munsif –  Sis. R.Tamilarasi

ஜெபிப்போம்

மருதூர் (Marudur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கரூருக்கு கிழக்கே 51 கிமீ தொலைவில் மருதூர் பேரூராட்சி உள்ளது.

இப்பேரூராட்சி குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் Bro. R.Manickam அவர்களுக்காகவும், பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் Bro. Arun Nehru அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற பணிகளில் தேவ சித்தம் நிறைவேறிட ஜெபிப்போம்.

மருதூர் நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. குளித்தலை Municipality Commissioner – Bro. N.Nanda Kumar அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் – Bro. V.P.Sekar அவர்களுக்காகவும், துணை நகராட்சி தலைவர் – Bro. K.M.Senthilkumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியானது 29 சகிமீ பரப்பும், 59 தெருக்களும் கொண்டுள்ளது.  மருதூர் டவுன் பஞ்சாயத்தில் 10,925 மக்கள்தொகை உள்ளது, இதில் 5,320 ஆண்கள் மற்றும் 5,605 பெண்கள் உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 2850 குடும்பங்கள் வசிக்கின்றனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள்  99.70%, முஸ்லீம்கள் 0.17%,  கிறிஸ்தவர்கள்  0.11% உள்ளனர்.

மருதூர் டவுன் பஞ்சாயத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, திரு.வி.,க. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்\நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள் உள்ளன. மருதூரில், ஆண்களின் கல்வியறிவு 84.28% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 64.64% ஆகவும் உள்ளது. இந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்காகவும், படிக்கின்ற மாணவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

மொத்த மக்கள் தொகையில், 5,948 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 3,363 ஆண்கள் மற்றும் 2,585 பெண்கள் உள்ளனர். பணிகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கின்ற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். தொழிலுக்கான பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

மருதூர் பேரூராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் இரட்சிக்கப்படாத மக்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.