No products in the cart.

தினம் ஓர் ஊர் – புகளூர் (Pugalur) – 25/06/24
தினம் ஓர் ஊர் – புகளூர் (Pugalur)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கரூர்
பரப்பளவு – 45 கிமீ (17 சதுர மைல்)
மக்கள் தொகை – 27,910
கல்வியறிவு – 78.62%
மக்களவைத் தொகுதி – கரூர்
சட்டமன்றத் தொகுதி – அரவக்குறிச்சி
District Collector – Bro. M. Thangavel, I.A.S
Superintendent of Police – Bro. Prabhakar
District Revenue Officer – Bro. M. Kannan
Project Director – Sis. Sreelekha Thamilchelvan
மக்களவை உறுப்பினர் – Sis. Jothimani (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. R. Elango (MLA)
Municipality Commissioner – Bro. Kaniraj
Chairman – Bro. Gunasekaran
Vice-Chairman – Bro. Pradhaban
District Judge – Bro. R. Shanmuga Sundaram
Chief Judicial Magistrate (Karur) – Bro. C.Sornakumar
Principal District Munsif Judge (Karur) – Sis. T.P.Sridevi
ஜெபிப்போம்
புகளூர் என்பது கரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது நஞ்சை புகளூர் மற்றும் புஞ்சை புகளூர் என இரு பகுதிகளைக் கொண்டது. நஞ்சை என்பது நீர் நிறைந்த நிலத்தைக் குறிக்கிறது, புஞ்சை என்பது சில நீர்நிலைகளைக் கொண்ட நிலத்தைக் குறிக்கிறது. காவிரி ஆற்றின் தென்கரையில் இந்த ஊர்கள் உள்ளன. காவிரியாற்று வெள்ளம் இவ்வூரில் புகுந்துவிடுவதால், இதனை மக்கள் புகலூர் என வழங்கப்பட்டு வந்தது. புன்செய்ப்புகழூரில் உள்ள பழங்காலச் சிவன் கோயில் கல்வெட்டு ஒன்று இவ்வூரைப் புகலூர் என்றே குறிப்பிடுகிறது.
புகளூர் நகராட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரி ஜோதிமணி அவர்களுக்காகவும், சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் R.இளங்கோ அவர்களுக்காக ஜெபிப்போம். இவர்கள் தங்கள் தொகுதி மக்களின் தேவைகளை எல்லாம் நிறைவேற்றும்படி ஜெபிப்போம். தேவன் இவர்களை ஆளுகை செய்யும்படி ஜெபிப்போம்.
புகளூர் நகராட்சி ஆணையர் Bro. Kaniraj அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. Gunasekaran அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. Pradhaban அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவருக்கு கொடுக்கப்பட்ட பணியில் உண்மையோடு நடந்துகொள்ளவும், கர்த்தருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து எல்லா காரியங்களையும் ஞானத்தோடு செய்யகூடிய கிருபையை தேவன் கொடுத்து வழிநடத்தும்படி ஜெபிப்போம்.
புகளூரில் பல கிராமங்கள் மற்றும் நகரங்கள் உள்ளன. இதில் தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனம் புகளூரில் மிகவும் பிரபலமானது. இந்நிறுவனமானது ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய காகித உற்பத்தி நிலையமாகும். இது சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக அவர்கள் குடும்பங்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம்.
புகளூரில் முக்கிய தொழில் விவசாயம். இங்கு கரும்பு, நெல், வாழைப்பழம், மரவல்லி கிழங்கு, நிலக்கடலை, சோளம், தினை மற்றும் சோளம் ஆகியன பயிரிடப்படுகின்றது. சமீப காலமாக தென்னை மரங்கள் விவசாயிகளிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்படியாகவும், விளைச்சலுக்கு ஏற்ற பலன் அவர்களுக்கு கிடைக்கவும் ஜெபிப்போம்.
புகளூரின் முக்கிய தொடக்கப் பள்ளி TNPL மெட்ரிக் பள்ளி ஆகும், இது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. மற்ற பள்ளிகளில் புகளூர் ஆண்கள் மற்றும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் ரங்கசாமி கவுண்டர் மேல்நிலைப் பள்ளி ஆகியவை அடங்கும். M. குமாரசாமி பொறியியல் கல்லூரி (MKCE), அருகிலுள்ள தளவாபாளையத்தில் ஒரு முக்கிய அடையாளமாகும். இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. பரமத்தி வேலூரில் உள்ள கந்தசுவாமி கந்தர் கல்லூரி புகளூருக்கு அருகில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும்.
புகளூர் நகராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். புகளூர் நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். புகளூர் நகராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.