No products in the cart.

தினம் ஓர் ஊர் – நத்தம் (Natham) – 01/04/25
தினம் ஓர் ஊர் – நத்தம் (Natham)
மாவட்டம் – திண்டுக்கல்
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 1,58,687
மொத்த பரப்பளவு – 12.43 சகிமீ
கல்வியறிவு – 72.3%
மக்களவைத் தொகுதி – திண்டுக்கல்
சட்டமன்றத் தொகுதி – நத்தம்
District Collector – Bro.S. Saravanan, IAS
District Revenue Officer – Sis. R.Jeyabharathi
Superintendent of PoliceRevenue – Dr.A.Pradeep IPS
PRINCIPAL DISTRICT AND
SESSIONS JUDGE – Sis. A.MUTHU SARATHA
District Munsif -cum- Judicial Magistrate – Bro. M.NALLAKANNAN (Natham)
ஜெபிப்போம்
நத்தம் (Natham) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். நத்தம் என்ற சொல்லுக்கு குடியிருப்பு பகுதி எனப்பொருள். இப்பேரூராட்சி 12.43 சகிமீ பரப்பளவைக் கொண்டது.
நத்தம் வட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் 26 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த பேரூராட்சியில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.
இந்த நகரமானது நத்தம் சட்டமன்ற தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. இப்பேரூராட்சி, 12.43 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்டுள்ளது. நத்தம் ஊராட்சி ஒன்றியம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். நத்தம் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.
நத்தம் பேரூராட்சியில் மொத்தம் 1,58,687 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் 80,037 ஆண்களும், 78,650 பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 85.1% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் மொத்தம் 37,470 குடும்பங்கள் வாழ்கிறார்கள். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 91.41% பேரும், இசுலாமியர்கள் 6.8% பேரும் , கிறித்தவர்கள் 1.37 பேரும், மற்ற மதத்தினர் 0.41% பேரும் இருக்கிறார்கள்.
இப்பேரூராட்சியில் 152 தெருக்களும், 40.149 கி.மீ சாலைகளும் அடங்கியுள்ளன. இப்பேரூராட்சியில் தற்பொழுது மெய்யம்பட்டி, அம்மன்குளம், சித்தாறு, ஆர்.எஸ்115, செட்டிகுளம் மற்றும் காவேரி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது. மேலும் இது தவிர உள்ளூர் குடிநீர் ஆதாரங்களான 52 கைபம்புகள், 152 சிறுமின்விசை பம்புகள், 27 மின்விசை பம்புகள், 6 திறந்த வெளி கிணறுகள் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது.
இப்பகுதி விவசாயம் மற்றும் வணிக தொழில்கள் மிகவும் பெருகி வரும் நகரமாகும். நத்தம் பேரூராட்சியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் செய்கின்ற தொழில்களை கர்த்தர் ஆசீர்வதித்து வர்த்திக்க செய்யும்படி ஜெபிப்போம். குடும்பத்தின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
நத்தம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்படவும், அநேக ஆத்துமாக்களை கர்த்தர் எழுப்பி தரும்படி ஜெபிப்போம். இந்த பகுதியில் உள்ள சிறு பிள்ளைகள் மற்றும் வாலிப பிள்ளைகள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவந்து பிள்ளைகள் கர்த்தருக்கென்று எழும்பி பிரகாசித்திட ஜெபிப்போம். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காக அவர்களின் தேவைகளுக்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். நத்தம் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.