No products in the cart.

தினம் ஓர் ஊர் – சீராப்பள்ளி (Seerapalli) – 29/09/24
தினம் ஓர் ஊர் – சீராப்பள்ளி (Seerapalli)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – நாமக்கல்
மக்கள் தொகை – 12,403
கல்வியறிவு – 73.5%
District Collector – Sis. S. Uma, IAS
Superintendent of Police – Bro. S.Rajesh Kannan, I.P.S
District Revenue Officer – Bro. R.Suman
Project Director – Bro. S.Vadivel
District Forest Officer – Bro. S.Kalanithi, I.F.S.,
மக்களவைத் தொகுதி – நாமக்கல்
சட்டமன்றத் தொகுதி – சேந்தமங்கலம்
மக்களவை உறுப்பினர் – Bro. Madheshwaran (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. K. Ponnusamy (MLA)
Municipality Commissioner – Bro. A. Muthusamy (Rasipuram)
Chairman – Sis. R. Kavitha Sankar (Rasipuram)
Vice-Chairman – Sis. Gomathi Anandhan (Rasipuram)
Principal District Judge – Bro. R.Gurumurthy (Namakkal)
District Munsif – Sis. S. Santhi (Rasipuram)
Subordinate Judge – Bro. J.K. Dhilip (Rasipuram)
ஜெபிப்போம்
சீராப்பள்ளி (Seerapalli) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியானது வேளாண்மை, சேகோ ஆலைகள், மஞ்சள் குடோன்கள் நிறைந்த ஊர் பகுதியாகும். சீராப்பள்ளி பேரூராட்சிக்கு தெற்கில் 35 கிமீ தொலைவில் நாமக்கல் உள்ளது. இதன் வடக்கில் சேலம் 37 கிமீ; கிழக்கில் நாமகிரிப்பேட்டை 3 கிமீ தொலைவில் உள்ளது.
சீராப்பள்ளி பேரூராட்சி சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் Bro. K. Ponnusamy அவர்களுக்காகவும், நாமக்கல் மக்களவை உறுப்பினர் Bro. Madheshwaran அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை உண்மையாகவும், தேவ பயத்தோடும் செய்ய ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியானது 6 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 32 தெருக்களையும் கொண்டுள்ளது. இந்த நகரத்தின் மன்ற உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம். பேரூராட்சியின் அடிப்படை தேவைகளுக்காக ஜெபிப்போம். பேரூராட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக ஜெபிப்போம்.
சீராப்பள்ளியின் மொத்த மக்கள் தொகை 12,403 இதில் 6,250 ஆண்கள் மற்றும் 6,153 பெண்கள் ஆவர். சீராப்பள்ளி நகரில் மொத்தம் 3,344 குடும்பங்கள் வசிக்கின்றன. சீராப்பள்ளி நகரில் 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 1059 ஆகும். சீராப்பள்ளியில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 80.69% மற்றும் பெண்களின் கல்வியறிவு விகிதம் 66.25% ஆகும். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் (99.31%), முஸ்லீம்கள் (0.44%), கிறிஸ்துவர்கள் (0.22%), சீக்கியர் (0.01%) உள்ளனர்.
சீராப்பள்ளி டவுன் பஞ்சாயத்தில் மொத்த மக்கள் தொகையில், 6,404 பேர் பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பிரதான வேலையில் ஈடுபட்டுள்ள 6,404 தொழிலாளர்களில், 572 பேர் விவசாயிகள், 2,029 பேர் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் 496 பேர் வீட்டுத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்காக ஜெபிப்போம்.
சீராப்பள்ளியின் முக்கியத் தொழில் நெசவு மற்றும் விவசாயம் ஆகும். இப்பொழுது பெரும்பாலும் விசைத் தறிகளே உள்ளன. இவ்வூரில் கைத்தறி நெசவு அழியும் தருவாயில் உள்ளது. இவ்வூரில் நெய்யப்படும் ஆடைகள் சேலம், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் வாயிலாக வட மாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இவ்வூரினைச் சுற்றிலும் விவசாயம் நல்ல முறையில் செய்யப்படுகிறது. இங்கு அதிக அளவில் கிழங்கு பயிரப்படுவதால் அதனை சார்ந்து ஜவ்வரிசி தொழிற்சாலைகள் (சேகோ பேக்டரி) இப்பகுதியில் அதிகம் உள்ளது.
சீராப்பள்ளி பேரூராட்சிக்காக ஜெபிப்போம். பேரூராட்சியில் உள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். குடும்பமாய் தேவனை ஆராதிக்க ஜெபிப்போம். குடும்பத்தின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். இப்பேரூராட்சியின் முக்கிய தொழிலான நெசவு மற்றும் விவசாய தொழிலுக்காக ஜெபிப்போம். இந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். தொழில் வளர்ச்சிக்காக ஜெபிப்போம். சீராப்பள்ளி பேரூராட்சியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம்.