Out Of Stock

நீங்கள் ஜெபவீரர் ஜெபவீராங்கனைகள்!

50.00

முன்னுரை!

“ஜெபம்” என்பது, சர்வ வல்ல தேவனோடு பேசி, உறவாடி ஐக்கியம் கொள்வதாகும். அவரே பரலோகத்தையும், பூமியையும், காணப்படுகிறவைகளையும், காணப்படாதவைகளையும் சிருஷ்டித்தவர்.

தாயின் வயிற்றில் உங்களை உருவாக்கி, நல்ல சரீரத்தை தந்து, அதற்குள்ளே ஆவியையும், ஆத்துமாவையும் வைத்தார்.

நானும், நீங்களும் இந்தப் பூமியில் வாழ நல்லதொரு வாய்ப்பைத் தந்தார். அவரோடு, மகிழ்ச்சியாக உறவாடுவது, எத்தனை பாக்கியமானது!

ஜெபத்தைக் குறித்து, ஏராளமான புத்தகங்கள் வெளி வந்திருந்தாலும், கர்த்தருடைய நாமம் மகிமைப்படவும், நீங்கள் சிறந்த ஜெபவீரர், வீராங்கனைகளாக விளங்கும்படியாகவும், இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன்.

‘ஜெபமே ஜீவன், ஜெபமே ஜெயம்” என்று பாடுகிறோம். ஜெபமே, உங்கள் சுவாசம், ஜெபமே உங்களுடைய இருதயத்துடிப்பு, உயிர்நாடியாக இருக்கட்டும்.

தேவபிள்ளைகளே, கர்த்தரோடு ஜெபத்தில் உறவாடி ஐக்கியம் கொண்டு, மகிழுங்கள்! சிறந்த ஆவிக்குரிய வாழ்க்கை வாழுங்கள்.

சகோ. J. சாம் ஜெபத்துரை

Out of stock

Additional information

Author

J. Sam Jebadurai

Publisher

Horeb Art Printers